Saturday, December 12, 2009

♥ தாஜ் மஹால் ♥

அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இன்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விவரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.

தாஜ் மஹால் முஹலாய சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜ ஹன்" (Shāh Jahān) தனது காதலி, மனைவி, அரசி "மும்தாஜ் மஹல்" (Mumtaz Mahal) இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.

இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்திர பிரதேஷ் (Uttar Pradesh) மாநிலத்தின் ஆக்ரா (Agra) நகரில் அமைந்துள்ளது.

தாஜ் மஹால் (Taj Mahal) 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள் கல்களால் 1631ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள், பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள், பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள்.

இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றய நான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.

முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும், கலைகளையும், வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும், வெள்ளை மாஃபிள் கட்டிடமும், நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும், கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது.

ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.

தாஜ்மஹால் முகப்பில் "குர்ஆன்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.

ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்".

அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் பேரரசருமான ஷாஜஹான் வரலற்றுடன் இருண்ட கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாஜ் மஹால் கட்டி நிறைவு பெற்றதும் அங்கு வேலைசெய்த அனைவர் கைகள் வெட்டப்பட்டதாகவும் முதன்மை கட்டிட கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது மாதிரியான ஓர் நினைவாலயம் வேறு யாராலும் கட்டப்படுவதை தடுப்பதற்கு ஷாஜ ஹான் இட்டகட்டளை இது எனவும் சொல்லப்படுகின்றது.

ஷாஜஹான் கட்டளைப்படி அந்நாட்களில் தாஜ்மஹால் கட்டிட வரைபட உருவாக்கத்திலும் கட்டிட வேலைத்திட்டத்திலும் பல இந்துசமய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அத்துடன் இஸ்லாமிய சாயலும் இந்துக்கள் கைவண்ணமும் ஒன்றுசேர்ந்த இந்த அரிய கலைப்படைபின் பின்னால் பல கலைஞர்களின் பங்கு இருந்துள்ளது.

1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் (UNESCO) இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.

மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும், உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.

Monday, November 30, 2009

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி



மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
Mohandas Karamchand Gandhi

1930களில் மகாத்மா காந்தி

பிறப்பு : அக்டோபர் 2, 1869 போர்பந்தர், இந்தியா

இறப்பு : ஜனவரி 30 1948 (அகவை 78) புது தில்லி, இந்தியா படுகொலை

தேசியம் : இந்தியர்

வேறு பெயர்கள் : மகாத்மா காந்தி

அறியப்படுவது : இந்திய விடுதலைப் போராட்டம்

கல்வி : லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி

அரசியல் கட்சி : இந்திய தேசிய காங்கிரஸ்

சமயம் : இந்து சமயம்

வாழ்க்கைத் துணை : கஸ்தூரிபாய்

பிள்ளைகள் : ஹரிலால் மணிலால் ராம்தாஸ் தேவ்தாஸ்

கையொப்பம் :

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட் டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி உடனே அங்கு பயணமானார்.

Thursday, May 7, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்!!!

என்னுடைய இதயம் சிதைக்கபடாமல் இருந்தது. முன்னொரு காலத்தில். அது எனக்கு வசந்தகாலங்களாய் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் என்னை எதிர்நோக்கி கொண்டிருப்பதாய் இருந்தது, ஆம் அப்போதெல்லாம் உன்னுடன் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் இதயத்தில் செதுக்கி வைத்துகொண்டிருந்தேன்.

முதல் முதலாய் நான் உனை பார்த்த அந்த கணம் எனக்கு அலாதியான மகிழ்ச்சியை தந்திருந்தது. அதுவே உன்னை மறுபடியும் பார்க்க தூண்டியிருந்தது, எனக்கானவளை நான் கண்டுவிட்டதாய் நினைத்திருந்தேன். அப்படி தான் நீயும் என்னில் நுழைய ஆரம்பித்திருந்தாய்.

மாலை பொழுதானால் வீடு தேடிவரும் பசுவை பார்த்ததும் ஓடிபோய் மடிமுட்டும் கன்றினை போல் காத்து கிடந்திருப்பேன். அந்த காத்திருத்தல்கள் எல்லாம் சுகமாகவே இருக்கும் அப்போது. பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் வலிகளையும் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒத்ததாய் இருந்தது என் எண்ணங்கள் உன்னிடம் என் காதலை சொல்லும் வரை! ஒரு கொடுரமான கொலைகாரனின் திட்டங்களை ஒத்திருந்தது என் பொழுதுகள். சந்தர்ப்பம் தேடிகொண்டிருக்கும் நினைவுகள் எல்லாம் என் காதலை சொல்லிவிட. காதல் சுகமென்று படித்துவிட்டு அதில் இந்த மாதிரியான சொல்லமுடியாத வலிகளை காணும்போதெல்லாம் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனை திட்டி தீர்த்துகொண்டிருக்கும்.

ஆயினும் உன்னை கண்ட அடுத்த சிலநொடிகளில் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கு கோவில் கட்டிவிட தோன்றும். வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கே கோவில் என்றால் என் வாழ்க்கையில் நான் கண்டெடுத்தவள் நீ!

உன்னை நான் சொல்லமுடியாத ஒரு இடத்தில் வைத்திருந்தேன் என்பேன். அதுவே காதலின் உச்சம் எனவும் சொல்ல நினைக்கிறேன். நான் உன்னை பார்க்கும் அந்த கணங்களை தான் காதலுக்கான உண்மையான அர்த்தங்கள் என சொல்வதிலும் பெருமைகொள்வேன்.

நெரிசல்களுக்கிடையில் சிக்கி திணறி உனக்காக கூட்டங்களில் முட்டி மோதி அருகில் வந்து உன் தாவணி முந்தானையில் விரல் தொட்டு சிலாகித்து கொண்டிருப்பேன்.

பந்தை எதிர்நோக்கிய ஒரு கிரிக்கெட் வீரனின் சரியான சமயத்தில் நோக்கும் திறனை நான் பெற்றிருக்காமல் இருந்தேன். அருமையானதொரு சந்தர்ப்பத்தில் தனிமையில் உன்னை சந்தித்த போதும் ஒரு ஊமையை ஒத்திருந்தது என் கணங்கள்.

சூரியனை மிக அருகில் பார்க்கமுடியாத விண்வெளி வீரனை போலிருந்தது. உன் அருகில் நின்று என் காதலை பிரசவிக்க தவித்த நொடிகள். என் கண்கள் உன் கண்களை நேரடியாய் பார்க்கமுடியாமல் தலை கவிழ்ந்து நான் நின்றது போருக்கு பாதி வரை சென்று புறமுதுகு காட்டி திரும்பி ஓடியவனை ஒத்திருந்தது என் அசைவுகள்.

திரும்பி நடந்துகொண்டிருந்தேன். திரும்ப காதலை சொல்லும் தருணத்தை தேடி......................

தொடரும்......

Friday, April 24, 2009

அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்- சிறுகதை

காலை 7 மணிக்கெல்லாம் பையன் ரெடியாகி நின்று கொண்டிருந்தான் அவனது கிரிக்கெட் பையுடன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அவனுக்கு கிரிக்கெட் பயிற்சி வகுப்பு இருக்கிறது டாவ்ஷன் மைதானத்தில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அவனை பயிற்சிக்கு அழைத்து செல்வேன். அங்கேயே மூன்று மணி நேரம் இருந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பேன். 7 வயதாக இருந்தாலும், அவனுக்குள் இருக்கும் திறமையை கண்டு பெருமிதம் கொண்டள்ளேன் பல முறை.

"அப்பா...சீக்கிரம் வாங்க....டைம் ஆகுது." என்னை இழுத்தான் ரோஷன். நானும் அவனும் விளையாட்டு திடலை அடைந்தோம். இந்த பயிற்சி வகுப்பில் கிட்டதட்ட 20 பேருக்கு மேல் சிறுவர்கள் வந்து பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். பல பள்ளிபோட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் ஆட நிறைய திறன்மிக்க விளையாட்டாளர்களை உருவாக்கியுள்ளது இப்பயிற்சி வகுப்பு. அங்கே 9 மணிக்கு இருந்தால் போதும். ஆனால் ரோஷன் 7:30 மணிக்கே என்னை அழைத்துபோக சொல்வான். அவனது ஆர்வத்திற்கு நான் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.

இரண்டு மூன்று காக்கா குருவிகளின் சத்தம், சில நாய்கள் ஓடிகொண்டிருந்தன- என சுற்றுசூழல் அமைந்திருந்தது. பனி விலகும் நேரம். உடற்பயிற்சி செய்ய அருமையான தருணம். வீட்டிலிருந்து போட்டுவந்த காலணியை கழற்றிவைத்து விட்டு புதிதாக அவனது பயிற்சிவிப்பாளர் வாங்கி கொடுத்த ரீபோக் ஷூவை போட்டு கொண்டான். ரீபோக் ஷூ- ரொம்ப விலையாம், உயர்ந்த தரமிக்க ஷூவாம். ரோஷன் சொல்லி தான் எனக்கு தெரியும். ஆனா என்னால் வாங்கி கொடுக்க வசதி இல்லை.

"அப்பா.... நான் 3 ரவுண்டு ஓடிட்டு வரேன்." என்று சொல்லி முடிப்பதற்குள் கிளம்பிவிட்டான். விளையாட்டில் திறமை இருந்தாலும், உடற்பயிற்சி தேவை. அப்போது தான் உடல் வலிமை பெறும். கிரிக்கெட் போன்ற விளையாட்டு ரொம்ப நேரம் விளையாட வேண்டிய விளையாட்டு என்பதால் உடலில் தெம்பு ரொம்ப முக்கியம். அதை நன்கு அறிந்தவன் ரோஷன். ஓடி முடித்துவிட்டு, கால் தசைகளுக்கு, கைகளுக்கு உகந்த சிறு சிறு பயிற்சிமுறைகளை தானாகவே செய்தான்.

அவன் ஒவ்வொரு அசைவையும் கண்கொட்டாமல் ரசிப்பேன் ஒவ்வொரு வாரமும். 9 மணியை நெருங்க, மற்ற சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பயிற்சிவிப்பாளர், சில இணை பயிற்சிவிப்பாளர் என பலர் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு வாரமும் சில பெற்றோர்கள் தவறாமல் வந்துவிடுவார்கள், அதில் தெரிந்தவர்கள் சிறு புன்னகையிடுவார்கள். சில அப்பாக்கள் என்னிடம் வந்து பேசுவார்கள். அதில் ஒருவர்தான் குமார்.

குமார், "என்ன சார், எப்படி இருக்கீங்க?....என்னங்க இது IPL போட்டிகள வேற இடத்துக்கு மாத்திட்டாங்க?" அவர் கையில் வைத்திருந்த பைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் கீழே வைத்துவிட்டு என் அருகே உட்கார்ந்தார்.

"எங்க இருந்தா என்ன? நம்ம... எப்படியும் டீவியில தான் பாக்க போறோம்." சிரித்து கொண்டே பதில் அளித்தேன்.

"அதுவும் சரி தான்" என்றவர் வேலைகளை பற்றியும், அவர் வீட்டு லோன் பிரச்சனைகளை பற்றியும் பேசி கொண்டிருந்தார். இந்த பிரச்சனைக்குரிய விஷயங்களை பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. இருந்தாலும், கேட்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டேன். அவர் சொன்னதற்கு தலையாட்டினேன். ஆனால், எனது சிந்தனை, கவனம், பார்வை எல்லாம் ரோஷனின் பயிற்சியின் மீதே இருந்தது. பயிற்சிவிப்பாளர் சொன்னவற்றை சிறுவர்கள் பின்பற்றுவதும், விளையாடுவதும் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிற்சிவிப்பாளர் அவனை பாராட்டும்போது, எட்டி உட்கார்ந்து பார்த்தாலும் உள்ளூர ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.

ரோஷன் ஒரு பேட்ஸ்மேன். பந்து எந்த வேகத்தில் வந்தாலும் அதை கச்சிதமாக அடிப்பதில் வல்லவன். ஒரு சின்ன கேம் விளையாடினார்கள் அன்று. 5 ஓவர்கள் கேம். 4 பந்துகளில் 17 ரன்களை எடுத்தான் ரோஷன். தண்ணீர் இடைவேளையின் போது என்னிடம் பெருமையாக கூறியதை ரசித்து கேட்டேன்.

"அப்பா.. இன்னிக்கு கேம்ல நான் தான் டாப். கவர் டிரைவ்ல ஒரு ஷாட். அப்பரம் லெக் சைட்ல pull பண்ணி இன்னொரு பவுண்டரி. மொத்தம் 2 பவுண்டரி. 1 சிக்ஸர். அப்பரம் கடைசி பந்துல 3 ரன் எடுத்தேன்." வேர்வை முகத்தில் வழிந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மூச்சுயிறைக்க பேசி முடித்தான்.

நாள் முழுக்க விளையாட சொன்னாலும் விளையாடுவான் ரோஷன். இவனின் ஆசை கனவு எல்லாம் கிரிக்கெட் தான். எனக்கும் இவன் ஒரு விளையாட்டு வீரராக வரவேண்டும் என்பதே ஆசை. கேம் முடிந்து 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்தார்கள். அந்நேரத்திலும்கூட பேட்டிங், பந்தை பிடிப்பது, பந்தை ஸ்டம்பை பார்த்து அடிப்பது போன்ற பயிற்சிகளை சில சிறுவர்கள் அவர்களின் அப்பாவின் உதவியோடு பயிற்சி செய்தார்கள்.

ரோஷன் குமாரோடு பயிற்சி எடுத்தான். அச்சமயம் பயிற்சிவிப்பாளர் என்னிடம் பேசினார்.

"சார்... ரோஷன்.. ரொம்ப திறமசாலி. ரொம்ப கெட்டிக்காரன். இப்படியே அவன் விளையாடினால், அடுத்த 13 வயதுக்கு உட்பட்டோர் தமிழ்நாட்டு அணியில தேர்ந்தெடுக்கப்படுவான்... நல்ல எதிர்காலம் இருக்கு ரோஷனுக்கு." என்று என் தோளில் தட்டியபடி சொன்னார்.

என் மகிழ்ச்சிகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை என்பதால் என் ஆனந்த கண்ணீர் வர்ணிக்க ஆரம்பித்தன. கண்ணீரை துடைத்து கொண்டேன்.
பயிற்சி எல்லாம் முடிய மதியம் 12 ஆனது. பைகளை எடுத்து கொண்டோம். வீட்டிற்கு செல்லும் வழியில் தோனியின் பெரிய கட் அவுட் ஒன்று கம்பீரமாக சாலையை அலங்கரித்தது. சிவப்பு சிக்னல் இருந்ததால், வண்டியை நிறுத்தினேன். அந்த கட் அவுட்டை அனாந்து பார்த்த ரோஷன் என் முதுகை தட்டி, "அப்பா, நான் தோனி மாதிரி ஆகனும்!" என்றான்.

பிறவியிலே கால் ஊனமுற்றவனாக பிறந்த நான், அவ்வினாடி என் மகன் கூறியதற்கு என்னால் சொல்லமுடிந்த பதில், "நீ நிச்சயம் தோனி மாதிரி வருவே!"

என் மூன்று சக்கர வண்டியில் பயணத்தை தொடர்ந்தேன்.

Friday, April 17, 2009

நேனோ-ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 3)

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ப்ராஜக்டின் கருப்பு பக்கங்கள் என சிங்கூர் பிரச்சனையைச் சொல்லலாம். எளிதில் அசராத ரத்தன் டாடாவையே உணர்ச்சி வயப்பட்டு பேட்டி கொடுக்க வைத்தது இந்த பிரச்சினை. அப்போதுதான் வெற்றியை சுவைக்க ஆரம்பித்திருந்த அந்த ப்ராஜக்டிற்கு இது மிகப் பெரிய சவாலாகவே அமைந்தது. ரத்தன் டாடாவே இந்த காருக்கு 'டெஸ்பைட் மம்தா (Despite Mamtha)' என்று பெயர் வைக்க இருந்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் விளையாட்டுக்கள் சிங்கூரில் உச்சகட்ட அரங்கேற்றத்தில் இருந்த அதேசமயத்தில் புனேயில் இவர்கள் விலையை குறப்பதற்கான அனைத்து நடவடிகைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஆல்டர்நேடிவ் ஃப்யூல் லைன்ஸ், பிளாஸ்டிக்கை சிறந்த முறையில் உபயோகித்தல், சிறந்த முறையில் விளக்குகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டறிந்திருந்தனர்.

இரு சக்கர வாகனங்களும் இந்த ப்ராஜக்டிற்கு தூண்டுகோலாக இருந்ததனால், இரு சக்கர வாகன உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ராகேஷ் மிட்டல், யமாஹா நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் இரு சக்கர வாகனத்தில் பயன்படும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை உபயோகப்படுத்தும் உத்தியை கண்டுபிடித்தார். சஸ்பென்ஸன் சிஸ்டம், கேபிள்ஸ், விளக்குகள் போன்றவை இரு சக்கர வாகனங்களின் முறையை ஒட்டியே அமைக்கப்பட்டன.

இப்படி பல்வேறு இடங்களிலிருந்து ஐடியாக்கள் குவிந்த வண்ணமிருக்க, அவர்கள் விலை குறைக்க மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் காரின் இருக்கைகள். இந்த பிரச்சனைக்கு தீர்வு ரத்தன் டாடாவாலேயே அமைந்தது. சாப்பர் (Chopper) ஓட்டுவதில் அனுபவம் வாய்ந்தவரான ரத்தன் டாடா மும்பைக்கும், புனேக்கும் அடிக்கடி தானே ஓட்டிச் சென்றிருக்கிறார்). நேனோவின் இருக்கையையும், விண்டோ வைண்டிங் முறையையும் (Window winding mechanism) ஹெலிகாப்டரில் இருக்கும் முறையை அடிப்படையாக கொண்டே அமைத்தார்.

ஜப்பானிய குறை தீர்க்கும் முறையான 'போகா யோக்' (Poka yoke - mistake proofing) அங்கே நடைமுறைப் படுத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு காம்பனன்ட்டிலும் உள்ள பாகங்களை குறைப்பதன் மூலம் குறைந்த விலை காரை அவர்கள் உருவாக்கி கொண்டிருந்தனர். சில சமயம் முடிவுகள் அவர்களே பிரமிக்கும் வகையில் அமைந்தன.

ஒரு 'நிறைவேறாக் கனவு' நிஜமாகிக் கொண்டிருந்த அதே வேளையில், காரைப் பற்றிய சந்தேகங்களும் மனக் குறைகளும் வெளியுலகில் வளர்ந்து கொண்டே இருந்தன. அவர்கள் வெற்றியை நெருங்க, நெருங்க காரைப் பற்றிய வதந்திகளும் ஊடகங்களில் கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தன. இவற்றில் பெரும்பாண்மையானவை காரைக் குறை காண்பவையாகவோ, சந்தேகம் கொள்பவையாகவோ இருந்தன. சுற்றுச் சூழல் வல்லுநர்களோ 1 லட்ச ரூபாயில் உள்ள கார் இந்திய போக்குவரத்து முறையில் ஏற்படுத்தும் நெருக்கடியையும், சுற்றுசூழலில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிய சந்தேகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இந்தியாவில் மட்டும் இவர்கள் பிரச்சனையை சந்திக்க வில்லை. உலக அளவில் கேலியையும், கிண்டலையையும் சந்தித்தனர். சுசூகி நிறுவனமோ, அவர்கள் என்ன ஒரு மூன்று சக்கர வண்டியை, ஸ்டெப்னியோடு இருக்கிற மாதிரி உருவாக்கிவிட்டு கார்னு பேர் வைக்கப் போறாங்களான்னு நையாண்டி செய்தது. 2006ன் ஆரம்பத்தில் கூட சுசூகி நிறுவனம் 1 லட்ச ரூபாயில் நம்பகத்தன்மை கொண்டகாரை உருவாக்குதல் இயலாத என அறிவித்தது.

ஜனவரி 10, 2008, டெல்லியில் நடந்த அந்த ஆட்டோ எக்ஸ்போக்கு 10 நாட்கள் முன்பாகவே ரத்தன் டாடா தனது குழுவினருடன் இணைந்து ஒரு சரித்திரத்திற்கான முடிவுரையை எழுத ஆரம்பித்தார். ஊடகங்கள் உச்ச கட்ட பரபரப்பில் இருந்த அதேசமயத்தில், காரின் ஸ்டைல், டிசைன், சிறப்பம்சம் பற்றிய பரபரப்பு செய்திகள் வந்துகொண்டிருந்த சமயத்தில், மூன்று நேனோ கார்கள் டெல்லிக்கு கண்டெய்னர் மூலம் அனுப்பப்பட்டு, லாஞ்ச் செய்யப்படும் வரை யாராலும் பார்க்கப் படாமலேயே (முடியாமலேயே) இருந்தது.

ஜனவரி 10, 2008, இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் ரத்தன் டாடா, வெள்ளை நிற நேனோவை ஸ்டேஜிற்கு ஓட்டி வந்து உலகிற்கு அறிமுகப் படுத்தினார். சுற்றியிருந்த கூட்டம் மெய் மறந்து ஆர்பரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், உடலளவில் மட்டும் சோர்ந்திருந்த ரத்தன் டாடா, மைக்கில் சொன்ன வார்த்தை 'A Promise is a Promise' - இந்தக் காரின் விலை 1 லட்சம் மட்டுமே என்றதில் பலரது மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

சரித்திரத்தை சாதித்த பெருமையால் அவர்கள் திளைத்திருக்க இரு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொண்டார்கள், இந்த சமயத்தில் நாம் இங்கு இருக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று. இன்னொரு பத்திரிக்கையாளர் புன்னகையுடன், ஆமாம்! நாளை நம் பேரக்குழந்தைகளிடம் அந்த சமயத்தில் நாம் அங்கேதான் இருந்தோம்னு பெருமையா சொல்லிக்கலாம் என்று சிலாகித்தார்!

நேனோவின் வரவு இண்டஸ்ட்ரியில் பெருத்த மாற்றங்களை உண்டு பண்ணியது. 'டெட்ராய்ட்' நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் நுழையும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறது இப்போது. ஃபோர்டு நிறுவனத்தின் தலைவரோ, எந்த நிறுவனம் சரியாக 100 வருடங்களுக்கு முன்பாக 'மாடல் டி' என்ற காரின் மூலம் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தியதோ, அதன் தலைவர் நேனோவை அனைத்து விதிகளையும் தகர்த்தெறிந்த பொருளாக பார்க்கிறார். பிரம்மிக்ககூடிய மரியாதை ரத்தன் டாடாவின் மேல் ஏற்படுவதாக சிலாகிக்கிறார்.

மார்ச் 5, 2008ல் இதே நேனோவை ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் லாஞ்ச் செய்யப்பட்ட பொழுது ஆஸ்டான் மார்டினின் (Aston Martin) சி.இ.ஓ டேவிட் ரிச்சர்ட்ஸ் ரவி காந்தின் கையை குலுக்கியவாறே, இங்கு பல அழகான கார்கள் இருந்தாலும், நீங்கள் ஒட்டு மொத்த கூட்டத்தையும் உங்கள் பக்கம் திருடி விட்டீர்கள் என்று பாரட்டுகிறார்.

அதே சமயம் சில முணுமுணுப்புகளும் இல்லாமலில்லை. நேனோவில் ஏர்கண்டிஷனிங்கோ, பவர் ஸ்டியரிங்கோ, ஏர் பேக்ஸோ, வேறு சிறப்பம்சங்களோ இல்லை, இதை யார் வாங்கப் போகிறார்கள் என்று சீன கார் நிறுவனமான (BYD) குறை கூறும் சமயத்தில், ரத்தன் டாடாவோ நேனோவை, இது வெறும் 1 லட்ச ரூபாய் காரில்லை, பல்வேறு உயர்ந்த வகை மாடல்களை குறைந்த விலையிலும் அதே சமயம் அதிக லாபத்தில் உற்பத்தி செய்யவும், விற்கவும் அடிப்படை என்கிறார். நேனோவை அடிப்படயாகக் கொண்டு டாடா நிறுவனம் எலக்ட்ரிக் காரையும், ஹைப்ரிட் காரையும் உற்பத்தி செய்யப் போவதாக தெரிவிக்கிறார்.

ஜாக்குவாரையும் (Jaquar), லாண்ட் ரோவரையும் வாங்க நினைக்கும் அதே சமயத்தில்தான் நேனோவையும் டாடா நிறுவனம் வெளியிட்டது. அது மட்டும் நடந்தால் டாடா நிறுவனம் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள காரையும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்கும்.

இதுவரை இரு நாடுகள் டாடாவின் நேனோ கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்துள்ளன. தவிர அந்நாடுகள் டாடா நிறுவனம் R&D க்காக செய்த செலவுகளை ஏற்கவும் முன் வருகின்றன. டாடா என்ற பிராண்டை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பதிய செய்து விட்டனர் நேனோவின் மூலம். நேனோவை லாஞ்ச் செய்யும் போது ஏற்பட்ட பப்ளிசிட்டியின் மதிப்பு ஏறக்குறைய 500 கோடி இருக்கும் என்று கணித்துள்ளனர்.

இன்னும் நேனோ கடக்க வேண்டிய தூரம் மிச்சமிருக்க, அந்த குழு கடைசி கட்டவிலை குறைப்பு உத்தியை டிஸ்ட்ரிபியூஸன் சிஸ்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்க, ரத்தன் டாடா, எந்தவொரு மனிதனின் லட்சியங்களும், கனவுகளும் எளிதில் தளர்ந்து விடாதோ, அந்த மனிதன் இந்த கார் இன்னும் என்னை முழுமையாக திருப்திபடுத்தவில்லை என்கிறார்.

ஜனவரி 2008ல், நேனோவை வெளியுலகிற்கு அறிமுகப் படுத்தியிருந்தாலும், இப்போது (மார் 23ல்) நேனோவை சந்தைக்கு கொண்டு வந்திருப்பது பல விதங்களில் புருவங்களை உயர்த்த வைப்பதோடு இல்லாமல், வெவ்வேறு விதமான நிர்வாக சூட்சுமங்களையும், விற்பனைத் தந்திரங்களையும் உலகிற்கும் முக்கியமாக அமெரிக்காவிற்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஆம், நேனோ வெளிவந்திருக்கிற நேரம் ஒன்றும் சாதாரணமானதல்ல, அமெரிக்க கார் உற்பத்தியில் ஜாம்பவான்களான ஜிஎம், க்ரைஸ்லர் மற்றும் உலகின் முதல் மக்கள் காருக்கான சொந்தக்காரரான ஃபோர்டு நிறுவனம் போன்றவை தனது வாழ்வின் மிகக் கடுமையான சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் நேனோ வெளிவந்திருக்கிறது.

Monday, April 6, 2009

நேனோ-ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 2)

ஆகஸ்ட் 2005, கீரீஷ் வாஹ், அந்த குழுவில் இணைந்தது ஒரு முக்கிய தருணம். கீரீஷ் வாஹ் - டாட்டாவின் ஏஸ் (கனரக வண்டி) உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர். அவர் இணைந்த போதுதான், டாட்டாவின் முதல் மூல் (Mule) உருவாகியிருந்தது. (மூல் (Mule) என்பது ஆட்டோமொபைல் பேச்சு வழக்கில் என்ஜின், ட்ரான்ஸ்மிஷன், எலக்ட்ரானிக் சென்சார் மற்றும் சில பாகங்கள் மட்டும் கொண்ட வண்டி - இது சோதனைக்காக மட்டுமே பயன்படுத்துவது). அப்போது அவர்கள் 20bhp சக்தி கொண்ட என்ஜினைத்தான் உபயோகித்தனர். நரேந்திரகுமார் ஜெயின், டாட்டா நிறுவனத்தின் முன்னோடிகளில் ஒருவரும், டாட்டாவின் முதல் கேஸோலைன் என்ஜின் (gasoline) உருவாக காரணமாக இருந்தவருமான இவர் 20bhp சக்தி கொண்ட என்ஜினை சோதனைக்குட்படுத்தி பார்க்க விரும்பினார். ஆனால் அது வெற்றி பெற வில்லை. முதல் இரண்டு வருடங்களில் குறைந்த விலை காருக்கான என்ஜினை உலகெங்கும் தேடி அலைந்ததில் கண்டறிந்தது என்னவென்றால், டாட்டாவின் குறைந்த விலை காருக்கான என்ஜின் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதுதான்!.

ஒரு மோட்டார் பைக்கின் என்ஜினை கூட அவர்கள் உபயோகித்து பார்த்தனர், ஆனால் எதுவும் திருப்திகரமாக அமைய வில்லை. அதன்பின் டிசைனிங் குழுவுடன் இணைந்து வெற்றுத் தாள்களில் புது என்ஜினை வடிவமைக்க ஆரம்பித்தனர். பின்புதான் அவர்கள் 20bhp சக்தி கொண்ட என்ஜினை வடிவமைக்க ஆரம்பித்தனர். பாதிப் பயணத்திலேயே அவர்கள் புரிந்து கொண்டனர், இது போதாது என்று. அதனால் அவர்கள் 554CC (27bhp) என்ஜினை வடிவமைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் திருப்திகரம்மாக அமையாததால் 586CC கொண்ட என்ஜினை அவர்கள் முயற்சி செய்தனர். அது ஓரளவு திருப்திகரமாக அமையவே மற்ற காரியங்கள் விரைவாக நடந்தேறியது. மூன்று விஷயங்களில் அவர்கள் தெளிவாக இருந்தனர், அவை விலை, பெர்ஃபார்மன்ஸ், ரெகுலேட்டரி கம்ப்ளையன்ஸ்.

ஒரு புறம் டாட்டா நிறுவனம், காரின் தொழில் நுட்பத்தில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் அதனுடைய இத்தாலிய டிசைன் ஹவுஸ் (I.D.E.A - இண்டிகாவை டிசைன் செய்தது இவர்கள்தான்) நேனோவின் டிசைன், ஸ்டைலிங்கில் ஈடுபட்டிருந்தனர்.

டிசைனிங்கில் ரத்தன் டாட்டா அவரது பங்கை அடக்கி வாசித்தாலும், அவருடைய பங்கு மிக முக்கியமானது என்கிறார் கீரீஷ் வாஹ். ஒவ்வொரு மூல் (Mule)சோதனையின் போதும் அவர் உடனிருந்தார், ஏன் லாஞ்ச் செய்வதற்கு சில நாட்கள் முன்பு கூட அவர் டிசைனில் சில மாற்றங்களை மேற்கொண்டார் என்கிறார் கீரீஷ் வாஹ்.

டிசம்பர் 2005ல் இரண்டாவது மூல் (Mule) சோதனை செய்யப்பட்டது. 2006ன் மத்தியில் முதல் புரோட்டோடைப் (அ) ஆல்ஃபா சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை ஓரளவு வெற்றிகரமாகவே அமைந்தது. இருப்பினும் காரின் நீளத்தை சற்றே அதிகப்ப்டுத்தவும், இன்னும் சற்று ஸ்டைலாக்கவும் விரும்பினர் (100 mm). அப்படி என்றால் புது வடிவத்திற்கேற்ற அனைத்து பாகங்களையும் மீண்டும் ஒரு முறை உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் டிராயிங் ஹாலுக்கு சென்றனர்.

அதுவரை பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வந்த அந்த குழுவிற்கு, மிகப் பெரிய சப்போர்ட் மேனேஜ்மென்ட்டிடமிருந்துதான்! தோல்விக்கான காரணத்தை அவர்கள் யார் தலையிலும் சுமத்த வில்லை! இதில் கடினம் என்னவென்றால் தாங்கள் சாதிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையை கைவிடாமல் தொடர்வதுதான்.

எந்தவொரு மாடல் பிளானோ, பெஞ்ச்மார்க்கோ இல்லாததாலோ என்னவோ, ஒவ்வொருவரும் பலவித திட்டங்களை வைத்திருந்தனர். இதன் மிகப் பெரிய சவால் என்னவென்றால் அந்த திட்டங்களை ஒரு ஸ்பெக்குள் (Spec) கொண்டு வருவதுதான். ஒரே ஒரு ஒப்புக்கொள்ளக் கூடிய பெஞ்ச்மார்க் இருந்ததென்றால் அது மாருதி 800 தான். ஆனால் அதுவும் 2 லட்சத்திற்கும் அதிக விலையைக் கொண்டது.

சில சமயங்களில் அவர்கள் திரும்பத் திரும்ப சில கடினமான வேலைகளையே செய்ய வேண்டியிருந்தது. நரேந்திரகுமார் ஜெயின், ஏறக்குறைய 150 தெர்மோடைனமிக் ஸிமுலேசன்களை (ஒவ்வொன்றிற்கும் எட்டு முதல் பத்து மணி நேரம் ஆகும்) மேற்கொண்டார். Bodyshopல் ஏறக்குறைய 10 விதமான் ஃப்ளோர் பிளானை உருவாக்கினர்.

நேனோவின் முழு உடலும் இரண்டு முறையும், எஞ்ஜின் மூன்று முறையும், Bodyshopல் 10 விதமான் ஃப்ளோர் பிளானும், இருக்கைகள் பத்து முறையும், காரின் டேஷ் போர்டு ஒரே சமயத்தில் இரண்டு கான்செப்ட் ரன்னிங்…….. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் திரும்பத் திரும்ப திருப்தி அடையும் வரை செய்து கொண்டே இருந்தனர்.

நேனோவின் பின்னால் எஞ்ஜின் வைப்பது என்ற முடிவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னராகவே அவர்கள் முடிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் உயரும் மூலப்பொருட்களின் விலை. உதாரணமாக ஸ்டீலின் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால், அவர்கள் ஸ்டீன் பயண்பாட்டை குறைத்து அதே சமயம் சிறந்த முறையில் உபயோகிக்கும் முறையையும் கண்டறிந்திருந்தனர்.

அக்டோபர் 2006, முடிவில் அவர்கள் சிறந்ததொரு என்ஜின் டிசைனை 624CC(34bhp) அடைந்தனர். ஒரு உயர் அழுத்த டை காஸ்ட் என்ஜின் இந்தியாவில் உருவாகுவது அதுதான் முதல் முறை!

நரேந்திரகுமார் ஜெயினின் புரோட்டோ டைப் என்ஜினாக உருமாற ஏறக்குறைய 5 மாதங்கள் ஆகின. இதற்காக அவர்கள் 10 பேடன்ட்ஸ் உரிமையை பதிவு செய்திருந்தனர். கார் உருவாக்கியிருந்த போது மொத்த பேடன்ட்ஸ் உரிமைகளின் எண்ணிக்கை 34. இன்னும் வரிசையில் சில நிற்கின்றன.

பாலசுப்ரமணியம் (Head of sourcing) கண்டிப்பாக அனைத்து வெண்டார்களாலும் வெறுக்கப்பட்ட மனிதராக இருந்திருப்பார். பல சூடான விவாதங்கள் அங்கே அரங்கேறியதற்கும், வெண்டார்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தற்கும் அதே சமயம் அவர்கள் விலை குறைக்கவும் அதற்கான தொழில் நுட்ப மாற்றங்களை செய்வதற்கும் காரண கர்த்தாவாக இருந்தார்.

ஏனெனில் குறைந்த விலை கார் என்ற கனவு நிறைவேற வெண்டார்களும் தங்களது பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அடுத்த கட்ட முதலீடோ, ரீ இன்ஜினியரிங்கோ செய்ய வேண்டியிருந்தது. அந்த முதலீட்டை திரும்பப் பெற அவர்களுக்கு வருடங்கள் பல கூட ஆகலாம். ஆனால் நிர்வாகம் அவர்கள் உடன் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்பட்டது. இருப்பினும் அவர்களை சம்மதிக்க வைத்தது மிக கடினமான காரியம் என்பதை ஒப்புக் கொள்கிறார் பாலசுப்ரமணியம்.

வெற்றியை அப்போதுதான் சுவைக்க ஆரம்பித்திருந்த அவர்கள் வெளியுலகில் எதிர்கொண்ட சவால்கள் என்ன? நேனோவை அறிமுகப்படுத்திய போது கிடைத்த வரவேற்ப்பு எத்தகையவை? மீண்டும் விரைவில் பாகம் 3 ல்…………

Tuesday, March 31, 2009

நேனோ - ஒரு சரித்திரத்தின் வரலாறு (பாகம் 1)

2003 ஆம் வருடம் அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. மும்பையிலிருந்த விக்டோரியன் சாண்ட்ஸ்டோன் கட்டிடத்தில் உள்ள பெரிய கான்ஃபரன்ஸ் ரூமில் அந்த ஐந்து பேரும் குழுமியிருந்தனர். உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்த, பலராலும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்ட அந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக புனேயிலிருந்து வந்திருந்தனர்.

ஒரு நாள் முன்பாகத்தான் அந்த அழைப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. அந்த அழைப்பு வந்திருந்தது வேறு யாரிடத்திலிருந்துமல்ல, அந்நிறுவனத்தின் தலைவரிடமிருந்துதான் (யாருடைய வார்த்தைகள் நிறைவேற வாய்ப்பில்லை என்று உலகால் கருதப்பட்டதோ! அவரிடமிருந்துதான்). அந்த நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாட்டா!!

அந்த சந்திப்பிற்கு சில நாட்கள் முன்புதான் ஜெனீவாவில் நடந்த ஆட்டோ ஷோவில் அவர் 1 லட்ச ரூபாயில் கார் உருவாக்குவது பற்றி பேசியிருந்தார். ஆரம்பத்தில், குறைந்த விலையில் கார் என்ற எண்ணம் உருவான போது விலை எதுவும் நிர்ணயமாகியிருக்க வில்லை. ஆனால் ஊடகங்கள் அதனுடைய விலையை 1 லட்சம் என்று நிர்ணயித்து விட்டன.

முடியுமோ, முடியாதோ, அவர்கள் அந்த சவாலை ஏற்றனர். எந்த வார்த்தைகளுக்காக, ஆட்டோமொபைல் என்ஜினியரிங்கிலுள்ள விதிகள் மாற்றி எழுதப் பட வேண்டியிருந்ததோ, அந்த வார்த்தைகளுக்காகவே அந்த சவாலை அவர்கள் ஏற்றனர். ஸ்டீலின் விலை தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் நிலையிலும் அந்த சவாலை அவர்கள் ஏற்றனர்.

இந்த சந்திப்பிற்கு அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு தெரிந்திருந்ததெல்லாம் இந்த சந்திப்பு கண்டிப்பாக டாட்டா தெரிவித்திருந்த குறைந்த விலை காருடன் தொடர்புடையதாக இருக்ககூடும் என்பதுதான்! ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்று இருந்தது, அது அவர்களுடைய அடுத்த நான்கு வருடங்கள் பல்வேறு தோல்விகளையும், முடிவில் தலைக்கணம் தரக்கூடிய வெற்றியையும் கொண்டிருக்கப் போகிறது என்பதுதான். இதில் கடினமான விஷயம் என்னவென்றால் இந்த விஷயங்கள் யாவற்றையும் யாரிடமும், ஏன் தங்கள் துணையிடம் கூட பரிமாறிக் கொள்ள முடியாது என்பதுதான்!

அந்த சந்திப்பில், 60 ஸ்லைடுகள் கொண்ட பிரசண்டேசன் மூலம் அவர்கள் விவாதிதது எல்லாம், அப்போது நடைமுறையிலிருந்த அனைத்து வகை குறைந்த விலை போக்குவரத்து முறையைத்தான் (Low cost models of personal transport). இவற்றில் மோட்டார் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ ரிகஷா மற்றும் அவர்களுடைய சொந்த படைப்பான இண்டிகா கார் அனைத்துமே அடங்கியிருந்தன.

தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று திட்டவட்டமாக அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. தவிர டாட்டாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள விரும்பினர். ரத்தன் டாட்டா அவரது கனவை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். அவர் உருவாக்க நினைத்ததெல்லாம், உலகின் மிக குறைந்த விலையில் ஒரு கார், எதனுடைய விலை மோட்டார் பைக்கின் விலையை விட சற்றே அதிகமாக இருக்க கூடியதும், எதனுடைய அறிமுகம் ஆட்டோ மொபைல் இண்டஸ்ட்ரியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடியதோ, அத்தகைய காரைத்தான் அவர் உருவாக்க விரும்பினார்.

அத்தோடு நிற்கவில்லை அவர், அந்த காரை உருவாக்கப் போகும் குழுவில் ஒருவராகவும் மாறினார். அவர் கூறிய மற்றொரு வாக்கியம் 'இது போன்ற காரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மட்டுமே உருவாக்க முடியும்' என்பதுதான்.

ஊட்டச்சத்து மாத்திரைகளை விட, ஊக்கம் தரக்கூடிய வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்தான். ஏனெனில் அந்த சந்திப்பு முடிந்த போது, அவர்கள் அனைவரும் இந்தியாவின் மிகச் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு மனிதனால் ஒரு சரித்திரத்தை படைப்பதற்காக தூண்டப்பட்டிருந்தனர்.

அடுத்த ஒன்றரை வருடங்களில், அந்த திட்டம் மிகப் பெரிய வளர்ச்சி எதையும் கண்டிருக்க வில்லை. எந்த மாதிரி காரை தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்பதைக் கூட அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை. பாதுகாப்புக்காக பிளாஸ்டிக் அ) கேன்வாஸ் ஷீட் கொண்ட ஒரு திறந்த வகை கார் அமைப்பைக் கூட அவர்கள் யோசித்து வைத்திருந்தனர். அவர்களுடைய பிரச்சனை என்னவென்றால், காரை அவர்கள் வடிவமைக்கும் போதெல்லாம் அவர்கள் மனதில் மோட்டார் பைக்கின் வடிவமே மேலோங்கியிருந்தது.

இதில் மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்த ப்ராஜக்ட் ஆரம்பமாகும் போது அவர்களிடம் எந்தவொரு மாதிரித் திட்டமோ (மாடல் பிளானோ), பெஞ்ச்மார்க்கோ கிடையாது என்பதுதான். ஏன், ரத்தன் டாட்டாவின் மனதில் இருந்தது கூட 4 பேர்கொண்ட குடும்பம் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்வது போன்ற ஒரு நினைவலையும், தெளிவில்லாத ஒரு கனவும்தான்.

இத்தகைய பின்புலம் கொண்ட ஒரு திட்டம் எப்படி மெய்பட்டது? என்னென்ன விதமான பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தனர்? 2001ல் ஏறக்குறைய 500 கோடி நட்டத்தை சந்தித்திருந்த ஒரு நிறுவனத்தால் இது எப்படி சாத்தியப்பட்டது? இன்னும் பல ஆக்கப்பூர்வமான தகவல்களோடு மீண்டும் சந்திப்போம் (பாகம்-2ல்)!!!

Friday, March 20, 2009

"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

மனிதன் இந்த மண்ணில் தோன்றிய காலத்திலிருந்தே மது அருந்தும் பழக்கமும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் மேற்கிலுள்ள கோடின்தேபே என்ற சுமேரிய ஊரில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் ஒயினும், பீரும் அருந்தியிருக்கிறார்கள் என்பது, அங்கிருந்து அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மெசபடோமியா நாட்டு மக்கள் தானியங்களைப் புளிக்கவைத்து அவற்றிலிருந்து மதுதயாரித்து அருந்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக, மதுவை மக்கள் இறைவழிபாட்டிலும், மருந்தாகவும் பயன்படுத்தி வந்தாலும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் மனிதனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் "ஹமுராபி" என்னும் சட்டத் தொகுப்பில் உள்ள மதுவைப் பற்றிய குறிப்புகளில், அதை எவ்வாறு அருந்தவேண்டும், எப்படி விற்பனை செய்யவேண்டும் என்பதற்கான வரை முறைகள் இருந்திருக்கின்றன. கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனிய மக்களிடம் இருந்த மதுப் பழக்கத்தால், சமுதாயத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கும் இந்நூல் ஆதாரமாக இருக்கிறது.

மாவீரன் அலெக்ஸாண்டர், கி.மு.330 ஆம் ஆண்டு பெர்சபோலிஸ் நகரில் இருந்த அரச மாளிகை தீக்கிரையான போது அவன் மதுபோதையில் இருந்ததாக புளுத்தார்க் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன் மதுநோய்க்கு அடிமையாகித்தான் இறந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக நமது இந்திய நாட்டில் இருந்துவரும் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட தீய விளைவுகளை இதிகாசங்களும், யோகிகளும் கண்டித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், முதியோர்களைவிட இளைஞர்களும், பெண்களைவிட ஆண்களும், தொழிலாளிகளைவிட அலுவலகத்தில் பணியாற்றுவோரும்தான் அதிகம் எனத் தெரிகிறது.

அமெரிக்க மக்களில் 33 சதவீதமும், இத்தாலியில் 36 சதவீதமும், பிரான்ஸில்38 சதவீதமும் மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

மூன்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஓர்ஆய்வின்படி, குறிப்பிட்ட சில சமுதாயங்களில் ஆண்களில் 50 சதவீதமும், பெண்களில் 20 சதவீதமும் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ள 400 பேர்களிடம் "நீங்கள் எதற்காகக் குடிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்களிடமிருந்து தெரியவந்தது:

# 32.75 % பேர் - போதைக்காக
# 24.00 % பேர் - தொழில் களைப்பைப் போக்கிக்கொள்ள.
# 22.25 % பேர் - கவலைகளை மறக்க.
# 05.00 % பேர் - இரவில் நன்றாகத் தூங்க.
# 04.50 % பேர் - உடல் உபாதைகளை மறக்க.
# 03.75 % பேர் - உடல் சூட்டைத் தணித்துக்கொள்ள.
# 03.75 % பேர் - காதல் தோல்வியை மறக்க.
# 02.75 % பேர் - பிள்ளைகளால் ஏற்படும் கவலைகளை மறக்க.
# 01.25 % பேர் - மனைவி தரும் தொல்லையை மறக்க.
# 01.00 % பேர் - உடல் உறவுகொள்ள.

மது அருந்தும் அத்தனை பேருமே குடி நோயாளிகள் அல்ல என்பது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்தது. அங்கே 10 கோடி பேர் மதுவருந்தினாலும், ஒரு கோடி பேர் மட்டுமே மது சம்பந்தமான நோய்களினால் பாதிகப்பட்டுள்ளனர்.

அதுபோலவே, பிரான்ஸ் நாட்டில் மது அருந்தும் கோடிக்கணக் கானவர்களில் 15 சதவீதம் மட்டுமே மது சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒரு நோயா அல்லது மனபலவீனமா?

தொடக்கத்தில் இது "மனபலவீனம்" என்று கருதப்பட்டு வந்தது. 1956ல் தான் 'தீவிர மதுப்பழக்கம் ஒரு நோய்' என்பதை ஏற்றுக் கொண்டது "அமெரிக்க மருத்துவ சங்கம்".

Saturday, March 14, 2009

"விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை. விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே, நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார்.

ஒரு இளம்பெண் விதவை ஆகிவிட்டால், அவளை உடனே வேறு ஒருவனுக்கு கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவ்ள் வாழ்க்கையில் சிதறுண்டு அழிந்துபோவாள். இதை உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது ஒரு வேளாண்மையில் வழங்கப்படும் பழமொழி.

"அறுத்தால் கட்டு! அல்லது அழியும்!" - என்பதே அப்பழமொழி.

"வயலில் நெற்கதிர்களை அறுத்தால் உடனே கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவை சிதறி அழிந்துபோகும்." என்பது பற்றி உருவான பழமொழி அது.

அவதான அருங்கலை விநோதராகவும், புலவர்களுக்குப் புலவராகவும், பாவலராகவும், நாவலராகவும் விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர் ஒரு சமயம் குமரி மாவட்டத்தில், திருவிதாங்கோடு என்னுமிடத்தில் சீறாப்புராணச் சொற்பொழிவில் இப்படிக் கூறியுள்ளார். 'விதவை மறுமண'த்தை ஆதரித்த பெருந்தகையாளர் அவர் என்பது அவ்ர் சொற்பொழிவுகளிலிருந்து தெரியவருகிறது.

Saturday, February 28, 2009

13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்! கொடுமை!

சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும் வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!

சிறுவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வது இங்கு அதிகரித்து உள்ளது என்கின்றனர்! இதனால் நீதிமன்றத்தில் இத்தகைய வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளனவாம்!!.

நீதிபதிகளின் கடுமையான கேள்விகளுக்கு சிறுவர்களுடைய பெற்றோர்களும் உள்ளாகின்றனர்.

தங்கள் பிள்ளைகள் செய்த தவறுக்காக சிறார் நீதிமன்ற வாசலில் ஒவ்வொரு நாளும் பல பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கைப் பாருங்கள்!! இந்த வழக்கைப்பார்த்தாலே சிங்கை இளைஞர் பற்றி
புரியும்! சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு! என்னதான் 13 - 16 வயது வரையுள்ள வயதினர், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டாலும் அடிப்பார்கள், திட்டுவார்கள், நாம் கேள்விப்பட்டவரை! இந்த சம்பவம் ரொம்ப ஓவர்!

மேட்டர் என்னன்னா பதினாறு வயதுப்பெண் ஒருத்தியை பதிமூன்று வயதுப்பெண் தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசித்திட்டி விட்டாளாம்.

தன்னைப் பற்றித் தரக் குறைவாகப் பேசி அவமானப் படுத்தியதற்காக அந்தப்பெண் பதிமூன்று வயதுப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டாள்!!

அதற்காக ஆள் வைத்து அந்த பதிமூன்று வயது சிறுமியைக் கற்பழிக்குமாறு கூறியிருக்கிறாள்! (அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)

அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக் கற்பழிக்க முடியவில்லை. ஆத்திரமடைந்த 16 வயது பெண், 13-15 வயது நிரம்பிய சக நண்பர்களுடன் சேர்ந்து, 13 வயதுச் சிறுமியைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறாள்! அந்த ஆணுடன் பிற பாலியல் செய்கைகளில் ஈடுபடுத்தியிருக்கிறாள்!

நினைக்கவே கொடுமையாகவுள்ளது! இதுபோன்ற நிகழ்வுகள் பல நாடுகளில் நடக்கின்றன. சிங்கப்பூரில் நடந்தது வெளியில் தெரிகிறது... அந்த 16 வயதுக் குற்றவாளியைச் சிறார் நீதிமன்றம் மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்பிவைத்து உள்ளது!!! கொடுமைடா சாமி!!!

இளம் வயதினரிடையே நிலவும் வன்முறை பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது சிங்கப்பூர் நற்பணிப் பேரவை.

ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள்!!

Friday, February 20, 2009

ஒன்பது வயதில் "இளம் தவில் இசைக்கலைஞர்"

"ஒன்பது வயதில்" இளம் தவில் இசைக்கலைஞர் சிவராமகணேசன் : அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் கீழ ரத வீதியில் வசித்து வரும் "ஆலடி அருணா - கிருஷ்ணவேணி" நாதஸ்வர தம்பதிகளின் ஒன்பது வயது மகன் சிவராம கணேசன் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பிலும் வகுப்பில் முதல் மாணவராக திகழ்கிறார்.


சிவராம கணேசனுக்கு 3 1/2 வயதிலேயே "கலைமாமணி" நாதஸ்வர வித்வான் எம்.பி.என்.பொன்னுச்சாமி தலைமையில் முதல் அரங்கேற்றம் நடந்தது. ஸ்ரீ ராகத்தில் ஒரு கீர்த்தனையை தவிலில் வாசிக்க, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டு ரசித்து பாராட்டிய அங்கீகாரம், முதல் வெளிநாட்டுப் பயணமாக பாரீஸ் நாட்டிற்கு ஒரு மாத பயண அனுபவம், ஒரு திருமண நிகழ்வில் பின்னணிப் பாடகர் வைத்தியநாதன், நடிகர் சிவக்குமார், மருத்துவர் ராமதாசு, கே.கே. எஸ்.எஸ்.ஆர், பேச்சாளர் குமரி ஆனந்தன், சமீபத்தில் மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களின் பாராட்டுக்கள்!

தமிழக அரசின் "கலை இளம் மணி 2008" விருது உள்பட பத்துக்கும் மேற்பட்ட விருது பட்டியல்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தந்த ஊக்கங்கள், 95 தாளங்களும் தவில் இசையில் வாசிக்கும் திறமை, தொடர்ந்து தற்போது 3 மணி நேரம் தவில் வாசிக்கும் சிவராம கணேசனுக்கு தொடர்ந்து 12 ம்ணி நேரம் தவில் வாசித்து கின்னஸ் சாதனை புரிய ஆசை. மேலும் இந்த இளம் தவில் இசைக்கலைஞருக்கு மார்த்தாண்டம் பக்கத்தில் "புதுக்கடை" என்ற கிராமத்தில் வயது வித்தியாசமின்றி ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வலையப்பட்டி" எ.ஆர்.சுப்ரமணியம், "ஹரித்துவாரமங்கலம்" எ.கே.பழனிவேல், "தஞ்சாவூர்" டி.ஆர். கோவிந்தராஜன் இவர்களைப் போல ஒரு பெரிய தவில் இசைக்கலைஞராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதான் சிவராம கணேசனின் இலட்சியம்! ஒரு கையில் பள்ளிக்கூட பையை தூக்கிக் கொள்ளும் நேரத்தின் இடையே தினமும் ஒரு மணி நேர தவில் வாசித்து விட்டுச்செல்லும் பூரிப்பும், இன்னும் மழலைத்தனம் குறையாத இந்த இளம் தவில் இசைக்கலைஞர் சிவராம கணேசனுக்கு தனி அழைப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இப்போதே நிகழ்ச்சிகளுக்கு "சிறப்பு விருந்தினராக" செல்லும் இளம் தவில் இசைக்கலைஞர் சிவராம கணேசனுக்கு என் வாழ்த்துக்கள்.

Wednesday, February 18, 2009

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில்


சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்!!
வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதற்காக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது தான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும். ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டில் எதேட்சையாக தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பு முத்துக்குமார் எனும் இளைஞர் 29.01.2009இல் தீக்குளித்து தற்கொலை செய்துண்டார். இந்த தற்கொலை சம்பவமானது உலக தமிழர்கள் எல்லோரினதும் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டது. இந்த முத்துக்குமார் என்பவர் கூட எதேட்சையாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்று நூறு வீதம் சொல்லிக் கொள்ள முடியாது. ஏன் என்றால் இவர் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் 'பெண்ணே நீ" என்ற மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்துள்ளார். அதே நேரம் இவர் தீக்குளிப்பதற்கு முன்பு 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை தயார் பண்ணி வைத்து விட்டு தான் தீக்குளித்திருக்கிறார்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பு சம்பவம் ராமதாசால் காசுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் குடும்ப கஷ்டத்திற்கு காரணமாக பணத்துக்காக உயிர்களை விடுவதற்கும் கிட்னியை விற்பதற்கும் நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை தமிழ் நாட்டில் உள்ள புலியாதரவு அரசியல் உதிரி கட்சிகள் பணத்தின் மூலம் கவர்ந்திழுத்து இப்படியான தீக்குளிப்பு போன்ற சம்பவங்களை நடத்தியிருக்கலாம்.

எது எப்படியோ முத்துக்குமாரின் தீக்குளிப்பு சம்பவமானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டதால் புலி இயக்க தலமையானது இதைபோன்ற சம்பவங்களை பல்வேறு நாடுகளிலும் தொடர்வதற்கு முடிவெடுத்து விட்டது. புலிகளை பொறுத்தவரை எப்படியாவது போரை நிறுத்தி தங்களின் இருப்பை வன்னியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய முக்கிய தேவையாகும் அதற்காக எவ்வளவு பணத்தையும், எவ்வளவு உயிர்களையும் இழப்பதற்கு தயாரான நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.

மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் (ராஜா, வயது 27) ஒருவர் கடந்த 09.02.2009 அன்று தீக்குளித்து இறந்தார். இவரும் தனது நாட்குறிப்பில் 'உலகத் தமிழர்களை நம்பி நான் தீக்குளிக்கிறேன், இலங்கையில் தமிழ் மக்களை உடனே காப்பாற்றவும், அமெரிக்க அரசு தலைவர் ஒபாமா இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்யவும்" என தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்டு ராஜா தீக்குளித்துள்ளதாக புலி இணைய தளங்களில் அந்த இளஞரின் படமும் போட்டு பிரசுரித்திருந்தார்கள். ஆனால் இலங்கையில் எங்கு பிறந்தார், இலங்கையில் எங்கு இருந்தார் என்பன போன்ற எந்த விபரங்களையும் புலி ஊடகங்கள் குறிப்பிட்டு காட்டப்பபடவில்லை. வெறுமனே இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் இறந்தவரின் படத்தையும் அவர்; எழுதிவைத்த மரணசாசனத்தையும் பிரசுரித்துக் காட்டிய புலி ஊடகங்கள் மற்றைய விபரங்களை மட்டும் ஏன் பிரசுரிக்கவில்லை? மலேசியாவில் தீக்குளித்து இறந்த இந்த இளஞரும் புலிகளின் தற்கொலை படையணியில் தயார் செய்யப்பட்ட (மூளை சலவை) ஒரு நபராகத் தான் இருக்க வேண்டும்.

அடுத்ததாக முக்கியான தீக்குளிப்பு தற்கொலை சம்பவமாக புலிகளால் மிகவும் திட்டமிட்டு செய்யபட்ட சம்பவமானது 12.02.2009 வியாழக்கிழமை இரவு 20.20 மணிக்கு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவரை தீக்குளிக்க வைத்து மரணமடைய வைக்கப்பட்டதாகும்.

ஐ.நா. சபையின் முன்னால் நடந்த சம்பவமானது வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த செய்தியானது சுவிஸில் உள்ள ஊடக துறையினருக்கே வெள்ளிகிழமை மாலை தான் தெரிய வந்துள்ளது. ஆனால் வெள்ளிகிழமை விடியகாலையே இந்த தீக்குளிப்பு சம்பவத்துக்காக ஐ.நா.சபை முன்றலில் கூடும்படி பல சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சுவிஸ் புலி இயக்க முகவர்களால் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு வெள்ளிகிழமை மதியமே நூற்றுகணக்கானோர் ஐ.நா.சபை முன்பாக கூடி தீக்குளித்து இறந்தவருக்கு புக்கள் செண்டுகள் வைக்கபட்டு பேரணி நடத்தியுள்ளார்கள்.

புலி முகவர்களுக்கு எப்படி தெரியும் ஐ.நா.சபை முன்னால் தமிழர் ஒருவர் தீக்குளித்து இறந்து விட்டார் என்று?. அதுவும் ஐ.நா.சபை முன்னால் தீக்குளிக்கப் போனவர் தனியாக போனதாகவும் இரவு 8.20மணிக்கு தீக்குளித்ததாகவும் சுவிஸ் தொலைகாட்சியில் வெள்ளிகிழமை மாலைநேர செய்தியில் தான் அறியக் கூடியதாக இருந்தது. அப்படியிருக்க வெள்ளிக்கிழமை விடியக்காலையே சுவிஸ் வாழ் புலி முகவர்களுக்கு எப்படி தெரியும்? இந்தசெய்தி.

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை ஒருவர் இறந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவரின் இரத்த சொந்தகாரர்கள் மூலமாக தான் அவரின் தகவல்களை சுவிஸ் பொலிசிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதுவும் இப்படியான தீக்குளிப்பு போன்ற தற்கொலை சம்பவங்களால் இறப்பவர்களை பற்றி தகவல்கள் இறப்பவரின் இரத்த உறவுகளை தவிர வேறு நபர்கள் யாருக்குமே எந்த தகவல்களையும் பொலிசார் வழங்க மாட்டார்கள். அப்படியிருக்க இறந்தவர் பற்றிய விபரங்களை சுவிஸ் பொலிசாரே சரியான விபரங்களை இன்னுமே அறிந்திராத பட்சத்தில் புலி ஊடகங்களுக்கு (புதினம்) எப்படி கிடைத்தது இறந்தவரின் படங்களும், அவர் எழுதி வைத்திருந்த மரணசாசண பற்றிய விபரங்களும்? (இவைகள் புலி ஊடகங்களில் வெள்ளிகிழமை மதியமே பிரசுரிக்கப்பட்டன.)

இறந்தவர் எழுதி வைத்துள்ளதாக புலி ஊடகங்களில் காட்டப்படும் மரண சாசணத்தில் அதில் குறிபிட்ட நபரின் முகவரி குறிப்பிடபடவில்லை. வெறுமனே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் நாட்டின் முகவரியில் வசிப்பதாகவே எழுதப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் கையால் எழுதப்படவில்லை. கணனியில் ஒழுங்கமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரணசாசனத்தில் உள்ள திகதி 12.02..2009. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீக்குளித்தவர் 12.02.2009 அன்றுதான் தீக்குளித்துள்ளார். இந்த ஏழுபக்க கடிதம் சுவிஸில் வைத்து தயாரிக்கப் பட்டிருக்கிறது. 12.02.2009இல் தீக்குளிக்க போகின்றவர் 12.02.2009 இல் இவ்வளவு ஒரு நீண்ட மடலை கணனியில் எழுதி வடிவமைத்திருக்க மாட்டார். இது ஏற்கனவே தயாரிக்கபட்ட மடலாகும். இதெல்லாம் திட்டமிட்டு செய்யபட்ட காரியங்களாகும். இந்த மடலை தயாரித்துக் கொடுத்தவர் ஒரு பிழை விட்டிருக்கிறார் என்னவென்றால் லண்டன் நாட்டின் முகவரியில் இருப்பதாக குறிப்பிடுகிறார். லண்டன் ஒரு சிற்றியாகும் அது நாடல்ல. பிரித்தானியா என்ற நாட்டிக்குள் இருக்கும் சிற்றிதான் லண்டனாகும்.

முருகதாஸால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் மரணசாசனம் வெளிநாட்டில் உள்ள புலி முகவர்களால் தயாரிக்கப்பட்டு முருகதாஸை தீக்குளிக்க வைத்து அவரின் படத்துடன் பிரசுரித்து படம் காட்டியிருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட புலி இயக்கத்தின் செயலாகும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சுவிஸ் பொலிசார் இதைபற்றி முழுமையாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம்.. இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலை செய்யும்படி தூண்டப்பட்டாரா? (கொலை செய்யப்பட்டாரா?) என்பது குறித்து சுவிஸ் பொலிசாரால் முழுமையாக விசாரிக்கப்படும் பட்சத்தில் தான் இந்த செயல்களின் சூத்திரதாரிகள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அப்பொழுது தான் உண்மை வெளிவரும்! இதோடு புலி இயக்கத்துக்கு சுவிசில் மரணசாசணமும் எழுதப்படலாம்.. எழுதப்பட வேண்டும்!!

நன்றி.. கி. பாஸ்கரன்-சுவிஸ்

Tuesday, February 17, 2009

இசை சந்தைக்கு இசையும் ஏ. ஆர். ரகுமான்

90களின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற பிரிட்டீஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கோல்டன் குளோப் என்ற விருதை பெற்றுள்ளார். இதை தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்ளும் ஒன்றாக ஊடகங்கள் பெருமைப்படச்சொல்கின்றன. இலங்கையில் கொத்துக்குண்டுகள் மூலம் தமிழர்களின் உயிரும், உடமையும் குதற்றப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியும், ரகுமானின் குளோப் விருதும் பெருமிதம் கொள்ளும் உணர்வாக முன்னிருத்தப்படுகின்றன. இது ஒரு புறமெனில் மறுபுறம் இப்படம் இந்தியாவை கேவலப்படுத்துவதாக சில அறிஞர்கள்! கொதிக்கிறார்கள். வழக்குத் தொடுத்திருக்கிறார்கள், தான் ஆராதிக்கும் ஒரு நடிகனின் கையெழுத்தைப் பெற மலத்தில் புறண்டெழுவதும், சேரிகளின் அவலத்தைக் காட்டுவதும் இந்தியாவை கேவலப்படுத்துவதாகும் என்றால், சேரிகளை இன்னும் சேரிகளாகவே வைத்திருப்பதும், ஒரு பிரிவு மக்கள் தாங்கள் வாழ்வதற்காக மலத்தோடு உழண்றுகொண்டிருப்பதும் இந்தியாவிற்கு அவமானமாக தொரியவில்லையா? என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஒரே இரவில் ஏழை கோடீஸ்வரனாகும் கோடம்பாக்கத்துக்குப்பையை ஆங்கிலத்துடைப்பத்தால் வாரியதால் ஆஸ்காரை வெல்லும் என்று இப்போதிலிருந்தே ரசிகர்கள் கொண்டாடக்காத்திருக்கிறார்கள். பொதுவாக இசை என்பது எல்லாத்தட்டு மக்களும் ரசிக்கப்படக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. இசை என்றால் பரவலாக அது திரை இசையையே குறிக்கும். அவ்வாறல்லாமல் திரைப்படமல்லாத இசைப்பாடல்களும் அவ்வப்போது வந்ததுண்டு. இசையை ரசிப்பதாக குறிப்பிட்டாலும் அது பாடலை உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி திரைப்பட இசையானாலும், அதற்கு வெளியிலிருந்து வந்த இசையானாலும் அவை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கும். மக்களுக்கு இசையின் மேலுள்ள மோகத்தைப் பயன்படுத்தி அவர்களை அந்த மயக்கத்திலேயே தக்க வைப்பதற்கும், அதன் மூலம் இசைத்தட்டு விற்பனையை கூட்டி லாபம் பார்பதற்கும், தங்கள் வாழ்வில் நேரடியாக கண்ட அனுபவங்களை அறிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான கருவியாக இசையும், ராகங்களும் தோன்றின. பின்னர் உழைப்பின் பயன் உழைப்பவர்களுக்கு கிடைக்காமல் போனபோது உழைப்பின் மீது ஏற்பட்ட சலிப்பைப்போக்கும் போதையாக பொழுதுபோக்காக உழைப்பை அபகரித்தவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அதுவே பலவித வடிவமாற்றங்களுக்கு உள்ளாகி ஆனால் உள்ளடக்கம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமன்றி பல கோடிகளை ஈட்டிதரும் இசைச்சந்தையாகவும் இன்று உருவெடுத்து நிற்கின்றது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிறுவனம் தயாரித்து ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துப் பாடி வெளியிட்ட வந்தேஏஏ மாட்ரம் எனும் (இந்து வெறி) தேசப்பக்தி இசை பத்து லட்சம் குறுந்தகடுகள் விற்கப்பட்டன. இசை என்னும் மயக்கம் அந்த பார்பனிய பாடலை பொழுது போக்கு என்னும் வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு மட்டுமன்றி பலகோடி லாபத்தையும் குவித்தது. இந்த வகையில் இளையாராஜாவின் திருவாசகமும் அடக்கம். மக்களை கருக்கும் நச்சுச்சிந்தனைகளை கலையின் வடிவங்களாகவும், பொழுதுபோக்காகவும் கொள்பவர்களும், கொண்டாடுபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வுட்டும், போராடத்தூண்டும் பாடல்களை பிரச்சாரப்பாடல்கள் என ஒதுக்குவது வேடிக்கையானது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல படங்களுக்கு இசையமைத்திருந்தும் (ஸ்லம் டாக் மில்லியனரை விடச் சிறப்பாக சில படங்களுக்கு இசையமைத்திருப்பதாக அவரது இசை ரசிகர்கள் கூறுகிறார்கள்) ஸ்லம் டாக்கின் இயக்குனர் டானி பெய்லேவின் முக்கியத்துவம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேவைப்பட்டதாக கூறப்பட்டாலும் அமெரிக்க நாளிதழ்கள் இப்படத்தையும் இசையையும் கொண்டாட்டம் என வர்ணித்து கட்டுரைகள் வெளியீடுவதற்கு பின்னணியிலுள்ள எண்ணம் வேறானது. இந்தியாவில் தமிழ் உட்பட தென்னிந்தி மொழிகளிலும், இந்தியிலும், வட மாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு தோராயமாக 600 படங்களுக்கு அதிகமாக வெளியாகின்றன. இவற்றின் பாடல்களுக்கும், திரைப்படமல்லாத பாடல்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இவற்றை சில உள்நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் ஓரளவு அறிமுகமான ஏ. ஆர். ரகுமானின் இசைக்கு விருது வழங்குவதன் மூலம் அதை புகழ்ந்து கட்டுரைகள் வெளியீடுவதன் மூலமும் அந்த இசைச்சந்தையை கைப்பற்ற கலத்தில் குதிக்கின்றன. ஏ. ஆர். ரகுமானின் மேற்கத்திய பாணியின் இசையமைப்பு இந்திய ரசிகர்களை ஏற்கனவே அதற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அழகி பட்டம் வழங்கியதன் மூலம் அழகு சாதன பொருட்களின் விற்பனையை பலமடங்கு அதிகரித்ததையும், திரையரங்குகளை பெறும் நிறுவனங்கம் கைப்பற்றி வருவதையும் இந்த இடத்தில் நினைவுக் கூர்ந்து பாருங்கள். மேற்கத்திய இசைக்குப்பைகளையும் உணர்வற்ற கூச்சல்களையும் இந்திய சந்தையில் கொட்டி மக்களின் உழைப்பை மேலும் சுரண்ட கூரிய நகங்களுடன் காத்திருக்கின்றன அவைகளை.

“திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா” போன்ற பாடல்களை (தாஜ்மஹால் ஏ. ஆர். ரகுமான்) இசையாகவும் கலை வடிவமாகவும் ரசிக்கும் மக்கள் “மக்கள் ஆயுதம் ஏந்துவது சொல்லம்மா வன்முறையா?” (மகஇக வெளியீடு) போன்ற பாடல்களை வன்முறை என்றும் பிரச்சாரப் பாடல்கள் என்றும் ஒதுக்குவது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வதற்குத்தான் துணைபோகிறது என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்துக்கொள்ளும்போது எது இசை என்பதை புரிந்துகொள்வதோடு தினம் தினம் நம்மைச்சுற்றி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் இசை ஒரு பொருட்டல்ல என்னும் இங்கிதத்தையும் தொரிந்து கொள்ளமுடியும்.

Friday, January 16, 2009

How to Improve Your Memory & Exercise Your Brain

Everyone can take steps to improve their memory, and with time and practice most people can gain the ability to memorize seemingly impossible amounts of information. Whether you want to win the World Memory Championships, ace your history test, or simply remember where you put your keys, this article can get you started. Scientists believe that exercising your brain can create a ‘cognitive reserve’ that will help you stay sharp as you age.

1. Convince yourself that you do have a good memory that will improve. Too many people get stuck here and convince themselves that their memory is bad, that they are just not good with names, that numbers just slip out of their minds for some reason. Erase those thoughts and vow to improve your memory. Commit yourself to the task and bask in your achievements—it’s hard to keep motivated if you beat yourself down every time you make a little bit of progress.

2. Keep your brain active. The brain is not a muscle, but regularly “exercising” the brain actually does keep it growing and spurs the development of new nerve connections that can help improve memory. By developing new mental skills—especially complex ones such as learning a new language or learning to play a new musical instrument—and challenging your brain with puzzles and games you can keep your brain active and improve its physiological functioning.

3. Exercise daily. Regular aerobic exercise improves circulation and efficiency throughout the body, including in the brain, and can help ward off the memory loss that comes with aging. Exercise also makes you more alert and relaxed, and can thereby improve your memory uptake, allowing you to take better mental “pictures.”

4. Reduce stress. Chronic stress, although it does not physically damage the brain, can make remembering much more difficult. Even temporary stresses can make it more difficult to effectively focus on concepts and observe things. Try to relax, regularly practice yoga or other stretching exercises, and see a doctor if you have severe chronic stress.

5. Eat well and eat right. There are a lot of herbal supplements on the market that claim to improve memory, but none have yet been shown to be effective in clinical tests (although small studies have shown some promising results for ginkgo biloba and phosphatidylserine). A healthy diet, however, contributes to a healthy brain, and foods containing antioxidants—broccoli, blueberries, spinach, and berries, for example—and Omega-3 fatty acids appear to promote healthy brain functioning. Feed your brain with such supplements as Thiamine, Vitamin E, Niacin and Vitamin B-6. Grazing, eating 5 or 6 small meals throughout the day instead of 3 large meals, also seems to improve mental functioning (including memory) by limiting dips in blood sugar, which may negatively affect the brain.

6. Take better pictures. Often we forget things not because our memory is bad, but rather because our observational skills need work. One common situation where this occurs (and which almost everyone can relate to) is meeting new people. Often we don’t really learn people’s names at first because we aren’t really concentrating on remembering them. You’ll find that if you make a conscious effort to remember such things, you’ll do much better. One way to train yourself to be more observant is to look at an unfamiliar photograph for a few seconds and then turn the photograph over and describe or write down as many details as you can about the photograph. Try closing your eyes and picturing the photo in your mind. Use a new photograph each time you try this exercise, and with regular practice you will find you’re able to remember more details with even shorter glimpses of the photos.

7. Give yourself time to form a memory. Memories are very fragile in the short-term, and distractions can make you quickly forget something as simple as a phone number. The key to avoid losing memories before you can even form them is to be able to focus on the thing to be remembered for a while without thinking about other things, so when you’re trying to remember something, avoid distractions and complicated tasks for a few minutes.

8. Create vivid, memorable images. You remember information more easily if you can visualize it. If you want to associate a child with a book, try not to visualize the child reading the book – that’s too simple and forgettable. Instead, come up with something more jarring, something that sticks, like the book chasing the child, or the child eating the book. It’s your mind – make the images as shocking and emotional as possible to keep the associations strong.

9. Repeat things you need to learn. The more times you hear, see, or think about something, the more surely you’ll remember it, right? It’s a no-brainer. When you want to remember something, be it your new coworker’s name or your best friend’s birthday, repeat it, either out loud or silently. Try writing it down; think about it.

10. Group things you need to remember. Random lists of things (a shopping list, for example) can be especially difficult to remember. To make it easier, try categorizing the individual things from the list. If you can remember that, among other things, you wanted to buy four different kinds of vegetables, you’ll find it easier to remember all four.

11. Organize your life. Keep items that you frequently need, such as keys and eyeglasses, in the same place every time. Use an electronic organizer or daily planner to keep track of appointments, due dates for bills, and other tasks. Keep phone numbers and addresses in an address book or enter them into your computer or cell phone. Improved organization can help free up your powers of concentration so that you can remember less routine things. Even if being organized doesn’t improve your memory, you’ll receive a lot of the same benefits (i.e. you won’t have to search for your keys anymore).

12. Try meditation. Research now suggests that people who regularly practice “mindfulness” meditation are able to focus better and may have better memories. Mindfulness (also known as awareness or insight meditation) is the type commonly practiced in Western countries and is easy to learn. Studies at Massachusetts General Hospital show that regular meditation thickens the cerebral cortex in the brain by increasing the blood flow to that region. Some researchers believe this can enhance attention span, focus, and memory.

13. Sleep well. The amount of sleep we get affects the brain’s ability to recall recently learned information. Getting a good night’s sleep – a minimum of seven hours a night – may improve your short-term memory and long-term relational memory, according to recent studies conducted at the Harvard Medical School.

14. Build your memorization arsenal. Learn pegs, memory palaces, and the Dominic System. These techniques form the foundation for mnemonic techniques, and will visibly improve your memory.

15. Venture out and learn from your mistakes. Go ahead and take a stab at memorizing the first one hundred digits of pi, or, if you’ve done that already, the first one thousand. Memorize the monarchs of England through your memory palaces, or your grocery list through visualization. Through diligent effort you will eventually master the art of memorization.

Source : karmicmantra

Wednesday, January 7, 2009

6 kinds of Food that Keeps You Young

Olive Oil
Four decades ago, researchers from the Seven Countries Study concluded that the monounsaturated fats in olive oil were largely responsible for the low rates of heart disease and cancer on the Greek island of Crete. Now we know that olive oil also contains polyphenols, powerful antioxidants that may help prevent age-related diseases.


Yogurt
In the 1970s, Soviet Georgia was rumored to have more centenarians per capita than any other country. Reports at the time claimed that the secret of their long lives was yogurt, a food ubiquitous in their diets. While the age-defying powers of yogurt never have been proved directly, yogurt is rich in calcium, which helps stave off osteoporosis and contains 'good bacteria' that help maintain gut health and diminish the incidence of age-related intestinal illness.

Fish
Thirty years ago, researchers began to study why the native Inuits of Alaska were remarkably free of heart disease. The reason, scientists now think, is the extraordinary amount of fish they consume. Fish is an abundant source of omega-3 fats, which help prevent cholesterol buildup in arteries and protect against abnormal heart rhythms.


Chocolate
The Kuna people of the San Blas islands, off the coast of Panama, have a rate of heart disease that is nine times less than that of mainland Panamanians. The reason? The Kuna drink plenty of a beverage made with generous proportions of cocoa, which is unusually rich in flavanols that help preserve the healthy function of blood vessels. Maintaining youthful blood vessels lowers risk of high blood pressure, type 2 diabetes, kidney disease and dementia.

Nuts
Studies of Seventh-Day Adventists (a religious denomination that emphasizes healthy living and a vegetarian diet) show that those who eat nuts gain, on average, an extra two and a half years. Nuts are rich sources of unsaturated fats, so they offer benefits similar to those associated with olive oil. They’re also concentrated sources of vitamins, minerals and other phytochemicals, including antioxidants.

Blueberries
In a landmark study published in 1999, researchers at Tufts University’s Jean Mayer Human Nutrition Research Center on Aging fed rats blueberry extract for a period of time that in 'rat lives' is equivalent to 10 human years. These rats outperformed rats fed regular chow on tests of balance and coordination when they reached old age. Compounds in blueberries (and other berries) mitigate inflammation and oxidative damage, which are associated with age-related deficits in memory and motor function.