Thursday, September 26, 2013

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி

கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.

இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.

அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை, அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.

இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.

இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

டவுண்லோடு செய்ய: http://www.coolphototransfer.com/

Tuesday, September 17, 2013

மூளை பற்றிய சில தகவல்கள்

நாம் 10 விழுக்காடு மூளையைத் தான் பயன் படுத்துகிறோம். 100 விழுக்காடு பயன்படுத்தினால், அறிவியலாளர் அய்ன்ஸ்டீன் போல் இருப்போம் என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு விழுக்காடு வேலை செய்யும் உறுப்பு மூளைதான்.சுவை, மணம், தொடு உணர்வு, சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. மூளை பற்றிய சில தகவல்கள்...

வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.

ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.

நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.

மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.

வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்... அதா வது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!

18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.

நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 விழுக்காடை மூளைதான் பயன்படுத்துகிறது.

மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது.

வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரொஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக நினைவாற்றலோடு இருக்கிறார்களாம்.

மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு, கனவு காணுவதில்லை என்று சொல்வதுண்டு. உண்மையில் கனவுதான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும்போதுதான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம்.

நாம் சிரிக்கும்போது நம் மூளையின் வெவ்வேறு அய்ந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. மூளைக்கு அது கடும் வேலைதான்.

இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி வலது கை பழக்கம் கொண்டவர்களை விட 11 விழுக்காடு பெரிதாக இருக்கிறது.

அண்மைய ஆய்வின்படி மூளை கசக்கிப் பிழியப்படும் முதல் 3 மன இறுக்கத்தைத் தரும் வேலைகள்...

1.கணக்காளர், 2. நூலகர், 3. கனரக வாகன ஓட்டுனர்

மூளையின் எடை பிறந்த குழந்தைக்கு 350-400 கிராம் யானைக்கு 4783 கிராம், பசுவிற்கு 425-458 கிராம், தங்கமீன் 0.097 கிராம், பீகிள் எனும் வகை நாய்க்கு 532 கிராம், கொரில்லா குரங்குகிற்கு 465-540 கிராம்.

நம்மை விட ஓர் அறிவாளி இந்த உலகத்தில் இருக்கிறதென்றால், அது கணினி தான் என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். சுமார் 530 பில்லியன் நரம்புகளின் திறனை பிரதிபலிக்கும் தன்மையுள்ள புளூ ஜீன்-கியூ சீக்குவா எனும் அதி விரைவு கணினி, ஒரு நொடிக்கு சுமார் 16 லட்சம் கோடி கணக்குகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாம். ஆனால் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் க்வாபெனா போஹென், இந்த புளூ ஜீன்-கியூ சீக்குவாவின் கணக்குத்திறன் கூட மனித மூளையுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு திறன் கொண்டதல்ல என்கிறார்.

ஏனென்றால், உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் என்கிறார் போஹென்.

இதற்கு காரணம், மனித மூளையானது ஒரே சமயத்தில் பல கணக்குகளை செய்யக்கூடிய திறன் கொண்டது என்பதுதான்! அதாவது, மூளையிலுள்ள பல்வேறு நரம்புக்குழுக்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிகின்றன. ஆனால் எவ்வளவு பெரிய அதிவிரைவு கணினியாக இருந்தாலும் கூட அதனால் ஒவ்வொரு படியாகத்தான் முன்னேறிச் செல்ல முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பிரச்சினைக்கான தீர்வைத்தான் கண்டறிய முடியுமாம்.

நியூரோ மார்பிக் பொறியியல் எனும் நவீன பொறியியல் துறையானது, புதுமையான வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் துணையுடன் மூளையின் கணக்குத் திறன்களை பிரதிபலிக்கக்கூடிய மின்னணு கருவிகளை உருவாக்க முனைகிறது. இத்துறையில் பணியாற்றும் பேராசிரியர் போ ஹெனின் ஆய்வுக்குழு, சமீபத்தில் நியூரோ கிரிட் எனும் செயற்கை மூளைக்கருவியை உருவாக்கியுள்ளது. சுமார் 10 லட்சம் நரம்புகளின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் திறனுள்ளது இந்த நியூரோ கிரிட் ஆனால் பிற அதிவிரைவு கணினிகளால் முடியாத செயலான 10 லட்சம் நரம்புகள் இயற்கையில் எப்படி இயங்கும் என்பதை நம் கண்முன்னே கொண்டுவர நியூரோ கிரிட்டினால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மூளையின் ஒரு நொடி செயல்பாட்டினை மேற்கொள்ள அதிவிரைவு கணினி சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனவாம். மூளையின் ஒரு நொடி செயல்பாட்டினை மேற்கொள்ள நியூரோகிரிட்டும் ஒரே ஒரு நொடி தான் எடுத்துக் கொள்கிறதாம். நியூரோகிரிட்டிலுள்ள 16 சிப்களில் சுமார் 65 ஆயிரம் சிலிக்கான் நரம்புகள் உள்ளன. இந்த சிலிக்கான் நரம்புகளின் செயல்பாடுகளை, சுமார் 80 சோதனைக் குறியீடுகளின் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாமாம். இதன் மூலம் மூளையிலுள்ள வெவ்வேறு விதமான நரம்புகளின் இயல்புகளை பிரதிபலிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில், மனித மூளையை ஆய்வுசெய்யும் சக்தி வாய்ந்த கருவியாக செயல்படும் இந்த நியூரோ கிரிட், மனித மூளையின் இயல்புகளை படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், இதுவரை முழுமையாக ஆய்வு செய்ய முடியாத ஆட்டிசம் என்ற மன இறுக்க நோய் மற்றும் மனப்பிளவு போன்ற சிக்கலான மூளைக்கோளாறுகள் குறித்த அறிவியல் உண்மைகளைக் கண்டறியவும் நியூரோ கிரிட் உதவும் என்கிறார் பேராசிரியர் போஹென்.

Thursday, September 5, 2013

அசல் தேன் எது?

இந்தக்காலத்தில் எதில் எடுத்தாலும் கலப்படம்தான்! உடுத்தும் உடையிலும், கட்டுமானப் பொருட்களிலும் கலப்படம் செய்கிறார்கள் என்றால், சிலர், பணத்தின் மீது வெறிகொண்டு, மற்ற‍வர்களது உயிரை துச்ச‍மாக எண்ணி, சாப்பிடும் பொருட்களில் கூட கலப்படம் செய்கிறார்கள்.

அப்ப‍டி கலப்படம் செய்யும் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் இந்த தேன். அசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் நல்ல‍ நிலையில் அப்ப‍டியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்க‍ரைப் பாகு மற்றும் வெல்ல‍ப் பாகுவை, அசல் தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி வாங்கி விடுகிறோம்.

அசல் தேன் எது? கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் கண்டறியலாம். அது எப்ப‍டி என்றுதானே கேட்கிறீர்கள். மூன்று வழிகளில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை, தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாமலும் மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.

ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

2) ஒரு டம்ளர் நிறைய‌ தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாமல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.

ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

3) ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்க‍ வாட்டில் உள்ள‍ மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்ப‍ற்றி எறிந்தால், அது அசல்தேன் என்பதை அறியலாம்

ஒருவேளை அந்த தீக்குச்சி எறியாமல் போனால் அது கலப்படம் தேன் என்பதை அறியலாம்.