Saturday, February 28, 2009

13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்! கொடுமை!

சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும் வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!

சிறுவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வது இங்கு அதிகரித்து உள்ளது என்கின்றனர்! இதனால் நீதிமன்றத்தில் இத்தகைய வழக்குகள் குவிந்த வண்ணம் உள்ளனவாம்!!.

நீதிபதிகளின் கடுமையான கேள்விகளுக்கு சிறுவர்களுடைய பெற்றோர்களும் உள்ளாகின்றனர்.

தங்கள் பிள்ளைகள் செய்த தவறுக்காக சிறார் நீதிமன்ற வாசலில் ஒவ்வொரு நாளும் பல பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கைப் பாருங்கள்!! இந்த வழக்கைப்பார்த்தாலே சிங்கை இளைஞர் பற்றி
புரியும்! சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு! என்னதான் 13 - 16 வயது வரையுள்ள வயதினர், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டாலும் அடிப்பார்கள், திட்டுவார்கள், நாம் கேள்விப்பட்டவரை! இந்த சம்பவம் ரொம்ப ஓவர்!

மேட்டர் என்னன்னா பதினாறு வயதுப்பெண் ஒருத்தியை பதிமூன்று வயதுப்பெண் தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் பேசித்திட்டி விட்டாளாம்.

தன்னைப் பற்றித் தரக் குறைவாகப் பேசி அவமானப் படுத்தியதற்காக அந்தப்பெண் பதிமூன்று வயதுப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டாள்!!

அதற்காக ஆள் வைத்து அந்த பதிமூன்று வயது சிறுமியைக் கற்பழிக்குமாறு கூறியிருக்கிறாள்! (அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)

அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக் கற்பழிக்க முடியவில்லை. ஆத்திரமடைந்த 16 வயது பெண், 13-15 வயது நிரம்பிய சக நண்பர்களுடன் சேர்ந்து, 13 வயதுச் சிறுமியைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறாள்! அந்த ஆணுடன் பிற பாலியல் செய்கைகளில் ஈடுபடுத்தியிருக்கிறாள்!

நினைக்கவே கொடுமையாகவுள்ளது! இதுபோன்ற நிகழ்வுகள் பல நாடுகளில் நடக்கின்றன. சிங்கப்பூரில் நடந்தது வெளியில் தெரிகிறது... அந்த 16 வயதுக் குற்றவாளியைச் சிறார் நீதிமன்றம் மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்பிவைத்து உள்ளது!!! கொடுமைடா சாமி!!!

இளம் வயதினரிடையே நிலவும் வன்முறை பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது சிங்கப்பூர் நற்பணிப் பேரவை.

ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள்!!

Friday, February 20, 2009

ஒன்பது வயதில் "இளம் தவில் இசைக்கலைஞர்"

"ஒன்பது வயதில்" இளம் தவில் இசைக்கலைஞர் சிவராமகணேசன் : அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் கீழ ரத வீதியில் வசித்து வரும் "ஆலடி அருணா - கிருஷ்ணவேணி" நாதஸ்வர தம்பதிகளின் ஒன்பது வயது மகன் சிவராம கணேசன் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பிலும் வகுப்பில் முதல் மாணவராக திகழ்கிறார்.


சிவராம கணேசனுக்கு 3 1/2 வயதிலேயே "கலைமாமணி" நாதஸ்வர வித்வான் எம்.பி.என்.பொன்னுச்சாமி தலைமையில் முதல் அரங்கேற்றம் நடந்தது. ஸ்ரீ ராகத்தில் ஒரு கீர்த்தனையை தவிலில் வாசிக்க, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டு ரசித்து பாராட்டிய அங்கீகாரம், முதல் வெளிநாட்டுப் பயணமாக பாரீஸ் நாட்டிற்கு ஒரு மாத பயண அனுபவம், ஒரு திருமண நிகழ்வில் பின்னணிப் பாடகர் வைத்தியநாதன், நடிகர் சிவக்குமார், மருத்துவர் ராமதாசு, கே.கே. எஸ்.எஸ்.ஆர், பேச்சாளர் குமரி ஆனந்தன், சமீபத்தில் மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களின் பாராட்டுக்கள்!

தமிழக அரசின் "கலை இளம் மணி 2008" விருது உள்பட பத்துக்கும் மேற்பட்ட விருது பட்டியல்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தந்த ஊக்கங்கள், 95 தாளங்களும் தவில் இசையில் வாசிக்கும் திறமை, தொடர்ந்து தற்போது 3 மணி நேரம் தவில் வாசிக்கும் சிவராம கணேசனுக்கு தொடர்ந்து 12 ம்ணி நேரம் தவில் வாசித்து கின்னஸ் சாதனை புரிய ஆசை. மேலும் இந்த இளம் தவில் இசைக்கலைஞருக்கு மார்த்தாண்டம் பக்கத்தில் "புதுக்கடை" என்ற கிராமத்தில் வயது வித்தியாசமின்றி ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வலையப்பட்டி" எ.ஆர்.சுப்ரமணியம், "ஹரித்துவாரமங்கலம்" எ.கே.பழனிவேல், "தஞ்சாவூர்" டி.ஆர். கோவிந்தராஜன் இவர்களைப் போல ஒரு பெரிய தவில் இசைக்கலைஞராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதான் சிவராம கணேசனின் இலட்சியம்! ஒரு கையில் பள்ளிக்கூட பையை தூக்கிக் கொள்ளும் நேரத்தின் இடையே தினமும் ஒரு மணி நேர தவில் வாசித்து விட்டுச்செல்லும் பூரிப்பும், இன்னும் மழலைத்தனம் குறையாத இந்த இளம் தவில் இசைக்கலைஞர் சிவராம கணேசனுக்கு தனி அழைப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இப்போதே நிகழ்ச்சிகளுக்கு "சிறப்பு விருந்தினராக" செல்லும் இளம் தவில் இசைக்கலைஞர் சிவராம கணேசனுக்கு என் வாழ்த்துக்கள்.

Wednesday, February 18, 2009

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில்


சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்!!
வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதற்காக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்டது தான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைச்சலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும். ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டில் எதேட்சையாக தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பு முத்துக்குமார் எனும் இளைஞர் 29.01.2009இல் தீக்குளித்து தற்கொலை செய்துண்டார். இந்த தற்கொலை சம்பவமானது உலக தமிழர்கள் எல்லோரினதும் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டது. இந்த முத்துக்குமார் என்பவர் கூட எதேட்சையாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்று நூறு வீதம் சொல்லிக் கொள்ள முடியாது. ஏன் என்றால் இவர் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் 'பெண்ணே நீ" என்ற மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்துள்ளார். அதே நேரம் இவர் தீக்குளிப்பதற்கு முன்பு 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை தயார் பண்ணி வைத்து விட்டு தான் தீக்குளித்திருக்கிறார்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பு சம்பவம் ராமதாசால் காசுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் குடும்ப கஷ்டத்திற்கு காரணமாக பணத்துக்காக உயிர்களை விடுவதற்கும் கிட்னியை விற்பதற்கும் நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை தமிழ் நாட்டில் உள்ள புலியாதரவு அரசியல் உதிரி கட்சிகள் பணத்தின் மூலம் கவர்ந்திழுத்து இப்படியான தீக்குளிப்பு போன்ற சம்பவங்களை நடத்தியிருக்கலாம்.

எது எப்படியோ முத்துக்குமாரின் தீக்குளிப்பு சம்பவமானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டதால் புலி இயக்க தலமையானது இதைபோன்ற சம்பவங்களை பல்வேறு நாடுகளிலும் தொடர்வதற்கு முடிவெடுத்து விட்டது. புலிகளை பொறுத்தவரை எப்படியாவது போரை நிறுத்தி தங்களின் இருப்பை வன்னியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய முக்கிய தேவையாகும் அதற்காக எவ்வளவு பணத்தையும், எவ்வளவு உயிர்களையும் இழப்பதற்கு தயாரான நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.

மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் (ராஜா, வயது 27) ஒருவர் கடந்த 09.02.2009 அன்று தீக்குளித்து இறந்தார். இவரும் தனது நாட்குறிப்பில் 'உலகத் தமிழர்களை நம்பி நான் தீக்குளிக்கிறேன், இலங்கையில் தமிழ் மக்களை உடனே காப்பாற்றவும், அமெரிக்க அரசு தலைவர் ஒபாமா இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்யவும்" என தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்டு ராஜா தீக்குளித்துள்ளதாக புலி இணைய தளங்களில் அந்த இளஞரின் படமும் போட்டு பிரசுரித்திருந்தார்கள். ஆனால் இலங்கையில் எங்கு பிறந்தார், இலங்கையில் எங்கு இருந்தார் என்பன போன்ற எந்த விபரங்களையும் புலி ஊடகங்கள் குறிப்பிட்டு காட்டப்பபடவில்லை. வெறுமனே இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் இறந்தவரின் படத்தையும் அவர்; எழுதிவைத்த மரணசாசனத்தையும் பிரசுரித்துக் காட்டிய புலி ஊடகங்கள் மற்றைய விபரங்களை மட்டும் ஏன் பிரசுரிக்கவில்லை? மலேசியாவில் தீக்குளித்து இறந்த இந்த இளஞரும் புலிகளின் தற்கொலை படையணியில் தயார் செய்யப்பட்ட (மூளை சலவை) ஒரு நபராகத் தான் இருக்க வேண்டும்.

அடுத்ததாக முக்கியான தீக்குளிப்பு தற்கொலை சம்பவமாக புலிகளால் மிகவும் திட்டமிட்டு செய்யபட்ட சம்பவமானது 12.02.2009 வியாழக்கிழமை இரவு 20.20 மணிக்கு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவரை தீக்குளிக்க வைத்து மரணமடைய வைக்கப்பட்டதாகும்.

ஐ.நா. சபையின் முன்னால் நடந்த சம்பவமானது வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த செய்தியானது சுவிஸில் உள்ள ஊடக துறையினருக்கே வெள்ளிகிழமை மாலை தான் தெரிய வந்துள்ளது. ஆனால் வெள்ளிகிழமை விடியகாலையே இந்த தீக்குளிப்பு சம்பவத்துக்காக ஐ.நா.சபை முன்றலில் கூடும்படி பல சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சுவிஸ் புலி இயக்க முகவர்களால் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு வெள்ளிகிழமை மதியமே நூற்றுகணக்கானோர் ஐ.நா.சபை முன்பாக கூடி தீக்குளித்து இறந்தவருக்கு புக்கள் செண்டுகள் வைக்கபட்டு பேரணி நடத்தியுள்ளார்கள்.

புலி முகவர்களுக்கு எப்படி தெரியும் ஐ.நா.சபை முன்னால் தமிழர் ஒருவர் தீக்குளித்து இறந்து விட்டார் என்று?. அதுவும் ஐ.நா.சபை முன்னால் தீக்குளிக்கப் போனவர் தனியாக போனதாகவும் இரவு 8.20மணிக்கு தீக்குளித்ததாகவும் சுவிஸ் தொலைகாட்சியில் வெள்ளிகிழமை மாலைநேர செய்தியில் தான் அறியக் கூடியதாக இருந்தது. அப்படியிருக்க வெள்ளிக்கிழமை விடியக்காலையே சுவிஸ் வாழ் புலி முகவர்களுக்கு எப்படி தெரியும்? இந்தசெய்தி.

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை ஒருவர் இறந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவரின் இரத்த சொந்தகாரர்கள் மூலமாக தான் அவரின் தகவல்களை சுவிஸ் பொலிசிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதுவும் இப்படியான தீக்குளிப்பு போன்ற தற்கொலை சம்பவங்களால் இறப்பவர்களை பற்றி தகவல்கள் இறப்பவரின் இரத்த உறவுகளை தவிர வேறு நபர்கள் யாருக்குமே எந்த தகவல்களையும் பொலிசார் வழங்க மாட்டார்கள். அப்படியிருக்க இறந்தவர் பற்றிய விபரங்களை சுவிஸ் பொலிசாரே சரியான விபரங்களை இன்னுமே அறிந்திராத பட்சத்தில் புலி ஊடகங்களுக்கு (புதினம்) எப்படி கிடைத்தது இறந்தவரின் படங்களும், அவர் எழுதி வைத்திருந்த மரணசாசண பற்றிய விபரங்களும்? (இவைகள் புலி ஊடகங்களில் வெள்ளிகிழமை மதியமே பிரசுரிக்கப்பட்டன.)

இறந்தவர் எழுதி வைத்துள்ளதாக புலி ஊடகங்களில் காட்டப்படும் மரண சாசணத்தில் அதில் குறிபிட்ட நபரின் முகவரி குறிப்பிடபடவில்லை. வெறுமனே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் நாட்டின் முகவரியில் வசிப்பதாகவே எழுதப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் கையால் எழுதப்படவில்லை. கணனியில் ஒழுங்கமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரணசாசனத்தில் உள்ள திகதி 12.02..2009. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீக்குளித்தவர் 12.02.2009 அன்றுதான் தீக்குளித்துள்ளார். இந்த ஏழுபக்க கடிதம் சுவிஸில் வைத்து தயாரிக்கப் பட்டிருக்கிறது. 12.02.2009இல் தீக்குளிக்க போகின்றவர் 12.02.2009 இல் இவ்வளவு ஒரு நீண்ட மடலை கணனியில் எழுதி வடிவமைத்திருக்க மாட்டார். இது ஏற்கனவே தயாரிக்கபட்ட மடலாகும். இதெல்லாம் திட்டமிட்டு செய்யபட்ட காரியங்களாகும். இந்த மடலை தயாரித்துக் கொடுத்தவர் ஒரு பிழை விட்டிருக்கிறார் என்னவென்றால் லண்டன் நாட்டின் முகவரியில் இருப்பதாக குறிப்பிடுகிறார். லண்டன் ஒரு சிற்றியாகும் அது நாடல்ல. பிரித்தானியா என்ற நாட்டிக்குள் இருக்கும் சிற்றிதான் லண்டனாகும்.

முருகதாஸால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் மரணசாசனம் வெளிநாட்டில் உள்ள புலி முகவர்களால் தயாரிக்கப்பட்டு முருகதாஸை தீக்குளிக்க வைத்து அவரின் படத்துடன் பிரசுரித்து படம் காட்டியிருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட புலி இயக்கத்தின் செயலாகும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சுவிஸ் பொலிசார் இதைபற்றி முழுமையாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம்.. இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலை செய்யும்படி தூண்டப்பட்டாரா? (கொலை செய்யப்பட்டாரா?) என்பது குறித்து சுவிஸ் பொலிசாரால் முழுமையாக விசாரிக்கப்படும் பட்சத்தில் தான் இந்த செயல்களின் சூத்திரதாரிகள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அப்பொழுது தான் உண்மை வெளிவரும்! இதோடு புலி இயக்கத்துக்கு சுவிசில் மரணசாசணமும் எழுதப்படலாம்.. எழுதப்பட வேண்டும்!!

நன்றி.. கி. பாஸ்கரன்-சுவிஸ்

Tuesday, February 17, 2009

இசை சந்தைக்கு இசையும் ஏ. ஆர். ரகுமான்

90களின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற பிரிட்டீஸ் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் கோல்டன் குளோப் என்ற விருதை பெற்றுள்ளார். இதை தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்ளும் ஒன்றாக ஊடகங்கள் பெருமைப்படச்சொல்கின்றன. இலங்கையில் கொத்துக்குண்டுகள் மூலம் தமிழர்களின் உயிரும், உடமையும் குதற்றப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியும், ரகுமானின் குளோப் விருதும் பெருமிதம் கொள்ளும் உணர்வாக முன்னிருத்தப்படுகின்றன. இது ஒரு புறமெனில் மறுபுறம் இப்படம் இந்தியாவை கேவலப்படுத்துவதாக சில அறிஞர்கள்! கொதிக்கிறார்கள். வழக்குத் தொடுத்திருக்கிறார்கள், தான் ஆராதிக்கும் ஒரு நடிகனின் கையெழுத்தைப் பெற மலத்தில் புறண்டெழுவதும், சேரிகளின் அவலத்தைக் காட்டுவதும் இந்தியாவை கேவலப்படுத்துவதாகும் என்றால், சேரிகளை இன்னும் சேரிகளாகவே வைத்திருப்பதும், ஒரு பிரிவு மக்கள் தாங்கள் வாழ்வதற்காக மலத்தோடு உழண்றுகொண்டிருப்பதும் இந்தியாவிற்கு அவமானமாக தொரியவில்லையா? என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஒரே இரவில் ஏழை கோடீஸ்வரனாகும் கோடம்பாக்கத்துக்குப்பையை ஆங்கிலத்துடைப்பத்தால் வாரியதால் ஆஸ்காரை வெல்லும் என்று இப்போதிலிருந்தே ரசிகர்கள் கொண்டாடக்காத்திருக்கிறார்கள். பொதுவாக இசை என்பது எல்லாத்தட்டு மக்களும் ரசிக்கப்படக்கூடியதாகவும், விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. இசை என்றால் பரவலாக அது திரை இசையையே குறிக்கும். அவ்வாறல்லாமல் திரைப்படமல்லாத இசைப்பாடல்களும் அவ்வப்போது வந்ததுண்டு. இசையை ரசிப்பதாக குறிப்பிட்டாலும் அது பாடலை உள்ளடக்கியதாகவே இருக்கும். இப்படி திரைப்பட இசையானாலும், அதற்கு வெளியிலிருந்து வந்த இசையானாலும் அவை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கும். மக்களுக்கு இசையின் மேலுள்ள மோகத்தைப் பயன்படுத்தி அவர்களை அந்த மயக்கத்திலேயே தக்க வைப்பதற்கும், அதன் மூலம் இசைத்தட்டு விற்பனையை கூட்டி லாபம் பார்பதற்கும், தங்கள் வாழ்வில் நேரடியாக கண்ட அனுபவங்களை அறிவாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான கருவியாக இசையும், ராகங்களும் தோன்றின. பின்னர் உழைப்பின் பயன் உழைப்பவர்களுக்கு கிடைக்காமல் போனபோது உழைப்பின் மீது ஏற்பட்ட சலிப்பைப்போக்கும் போதையாக பொழுதுபோக்காக உழைப்பை அபகரித்தவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அதுவே பலவித வடிவமாற்றங்களுக்கு உள்ளாகி ஆனால் உள்ளடக்கம் மாறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமன்றி பல கோடிகளை ஈட்டிதரும் இசைச்சந்தையாகவும் இன்று உருவெடுத்து நிற்கின்றது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சோனி நிறுவனம் தயாரித்து ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துப் பாடி வெளியிட்ட வந்தேஏஏ மாட்ரம் எனும் (இந்து வெறி) தேசப்பக்தி இசை பத்து லட்சம் குறுந்தகடுகள் விற்கப்பட்டன. இசை என்னும் மயக்கம் அந்த பார்பனிய பாடலை பொழுது போக்கு என்னும் வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு மட்டுமன்றி பலகோடி லாபத்தையும் குவித்தது. இந்த வகையில் இளையாராஜாவின் திருவாசகமும் அடக்கம். மக்களை கருக்கும் நச்சுச்சிந்தனைகளை கலையின் வடிவங்களாகவும், பொழுதுபோக்காகவும் கொள்பவர்களும், கொண்டாடுபவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வுட்டும், போராடத்தூண்டும் பாடல்களை பிரச்சாரப்பாடல்கள் என ஒதுக்குவது வேடிக்கையானது. தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று பல படங்களுக்கு இசையமைத்திருந்தும் (ஸ்லம் டாக் மில்லியனரை விடச் சிறப்பாக சில படங்களுக்கு இசையமைத்திருப்பதாக அவரது இசை ரசிகர்கள் கூறுகிறார்கள்) ஸ்லம் டாக்கின் இயக்குனர் டானி பெய்லேவின் முக்கியத்துவம் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தேவைப்பட்டதாக கூறப்பட்டாலும் அமெரிக்க நாளிதழ்கள் இப்படத்தையும் இசையையும் கொண்டாட்டம் என வர்ணித்து கட்டுரைகள் வெளியீடுவதற்கு பின்னணியிலுள்ள எண்ணம் வேறானது. இந்தியாவில் தமிழ் உட்பட தென்னிந்தி மொழிகளிலும், இந்தியிலும், வட மாநிலங்களிலும் சேர்த்து ஆண்டொன்றுக்கு தோராயமாக 600 படங்களுக்கு அதிகமாக வெளியாகின்றன. இவற்றின் பாடல்களுக்கும், திரைப்படமல்லாத பாடல்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இவற்றை சில உள்நாட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் ஓரளவு அறிமுகமான ஏ. ஆர். ரகுமானின் இசைக்கு விருது வழங்குவதன் மூலம் அதை புகழ்ந்து கட்டுரைகள் வெளியீடுவதன் மூலமும் அந்த இசைச்சந்தையை கைப்பற்ற கலத்தில் குதிக்கின்றன. ஏ. ஆர். ரகுமானின் மேற்கத்திய பாணியின் இசையமைப்பு இந்திய ரசிகர்களை ஏற்கனவே அதற்கு தயார்படுத்தி வைத்திருக்கிறது. தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு அழகி பட்டம் வழங்கியதன் மூலம் அழகு சாதன பொருட்களின் விற்பனையை பலமடங்கு அதிகரித்ததையும், திரையரங்குகளை பெறும் நிறுவனங்கம் கைப்பற்றி வருவதையும் இந்த இடத்தில் நினைவுக் கூர்ந்து பாருங்கள். மேற்கத்திய இசைக்குப்பைகளையும் உணர்வற்ற கூச்சல்களையும் இந்திய சந்தையில் கொட்டி மக்களின் உழைப்பை மேலும் சுரண்ட கூரிய நகங்களுடன் காத்திருக்கின்றன அவைகளை.

“திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா” போன்ற பாடல்களை (தாஜ்மஹால் ஏ. ஆர். ரகுமான்) இசையாகவும் கலை வடிவமாகவும் ரசிக்கும் மக்கள் “மக்கள் ஆயுதம் ஏந்துவது சொல்லம்மா வன்முறையா?” (மகஇக வெளியீடு) போன்ற பாடல்களை வன்முறை என்றும் பிரச்சாரப் பாடல்கள் என்றும் ஒதுக்குவது அவர்களை அவர்களே அழித்துக்கொள்வதற்குத்தான் துணைபோகிறது என்பதை உணரவேண்டும். அப்படி உணர்ந்துக்கொள்ளும்போது எது இசை என்பதை புரிந்துகொள்வதோடு தினம் தினம் நம்மைச்சுற்றி மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் இசை ஒரு பொருட்டல்ல என்னும் இங்கிதத்தையும் தொரிந்து கொள்ளமுடியும்.