Saturday, March 14, 2009

"விதவை மறுமண"த்தை வலியுறுத்தும் வேளாண்மைப் பழமொழி!

இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை. விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே, நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார்.

ஒரு இளம்பெண் விதவை ஆகிவிட்டால், அவளை உடனே வேறு ஒருவனுக்கு கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவ்ள் வாழ்க்கையில் சிதறுண்டு அழிந்துபோவாள். இதை உணர்த்துவதாகவே அமைந்திருக்கிறது ஒரு வேளாண்மையில் வழங்கப்படும் பழமொழி.

"அறுத்தால் கட்டு! அல்லது அழியும்!" - என்பதே அப்பழமொழி.

"வயலில் நெற்கதிர்களை அறுத்தால் உடனே கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவை சிதறி அழிந்துபோகும்." என்பது பற்றி உருவான பழமொழி அது.

அவதான அருங்கலை விநோதராகவும், புலவர்களுக்குப் புலவராகவும், பாவலராகவும், நாவலராகவும் விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர் ஒரு சமயம் குமரி மாவட்டத்தில், திருவிதாங்கோடு என்னுமிடத்தில் சீறாப்புராணச் சொற்பொழிவில் இப்படிக் கூறியுள்ளார். 'விதவை மறுமண'த்தை ஆதரித்த பெருந்தகையாளர் அவர் என்பது அவ்ர் சொற்பொழிவுகளிலிருந்து தெரியவருகிறது.

No comments:

Post a Comment