Saturday, April 30, 2011
காதலென்பது
காதல்
கனவுகளின்
வேடந்தாங்கல்
கற்பனைகளின்
சரணாலயம்.
காதல்
ஆழம் தெரியாமல்
காலைவிட்டால்,
உள்ளிழுத்து
உயிரை உறிஞ்சிவிட்டு
உடலை மட்டும்
வெளியேற்றிவிடும்
கடல்
காதல்
நினைவுகளை
நிஜமென்றெ நம்பி
நித்திரையை
தொலைத்துவிடும்
கனவு
காதல்
கல்விகற்க
செல்லும்போது
கலவிகற்க
கற்றுக்கொடுக்கும்
பாடம்
காதல்
எறியுமென்று தெரிந்தும்
நெஞ்சுக்குள்
கொழுத்திக்கொள்ளும்
நெருப்பு.
காதல்
மட்டும்தான் வாழ்க்கையென
நினைத்து வசந்தத்தை
தொலைத்து நிற்கும்
இலையுதிற்காலம்.
காதல்
என்ற சொல்லை நம்பி
கன்னியர் மட்டுமல்ல
காளைகளும் கதிகலங்கித்தவிக்கும்
கலிகாலம்.
காதல்
ஆள்களைத்தொட்டால்
கேளிக்கை
அதுவே!!
ஆன்மாவைத்தொட்டால்
வாழ்க்கை...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment