Monday, March 28, 2011

பிரியுமா பிரியம்....!

என் ஞாபகங்கள்
எப்போதாவது வந்தால்
உன் குழந்தையை கிள்ளிவிடு
நான் உனக்காய் அழுவதும்
உனக்கு ஞாபகம் வரட்டும்...

உனை பிரியமாய் பார்த்த
அதே கண்களால்த்தான்
உன் பிரிவையையும்
பார்க்க வைத்து
குருடாக்கினாய்
என் கண்களை...

எனை சந்திக்காமல்
இருக்கத்தான்
இடம் பெயர்ந்தாய்
என்று சொல்லி இருந்தால்
நான் உனக்காய்
என் உயிரை
சாகடித்திருப்பேனே…

என் கவிதைகளை
பிடித்த அளவுக்கு
உனக்கு என்னை
பிடிக்கவில்லை
அதனால்த்தானோ
என்னை விட்டு
பிரிகிறது உன்னை
போல் என்
கவிதைகளும்...

காதலுக்கு கண் இருக்கிறது
காதல் பிரிவுக்குத்தான்
கண் இல்லை
ஆமாம் நான்
பாக்கக் கூடியதாய்
நீ பாக்காமல்
பிரிந்து போனாயே..
.

No comments:

Post a Comment